உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

Supreme Court of India | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார்.

Published on: November 11, 2024 at 11:30 am

Supreme Court of India | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். அடுத்த தலைமை நீதிபதியாக மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அவர் சிபாரிசு செய்திருந்தார். சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை மத்திய அரசு கடந்த மாதம் 24 ஆம் தேதி நியமித்தது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சஞ்சீவ் கன்னா அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க ‘யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்’; ட்ரோல் பற்றி.. பிரிவுபசார விழாவில் டி.ஒய். சந்திரசூட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com