Jairam Ramesh : பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டிப் பேசினார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் காங்கிரஸின் மற்றொரு மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
Jairam Ramesh : பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டிப் பேசினார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் காங்கிரஸின் மற்றொரு மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

Published on: June 24, 2026 at 11:53 am
புதுடெல்லி, ஜூன் 24, 2026: காங்கிரஸ் கட்சிக்குள் பிரதமர் நரேந்திர மோடியின் G7 உரையைப் பாராட்டிய சசி தரூரின் கருத்து தொடர்பான விவாதம் எழுந்துள்ளது. இந் நிலையில், காங்கிரஸின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அதனை ஜனநாயகத்தின் அடையாளமாகவே விளக்கினார். தரூரின் பாராட்டுகள் கட்சிக்குள் மாறுபட்ட கண்ணோட்டங்களை வெளிப்படுத்தினாலும், அது காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகச் செயல்பாட்டின் பலமாகவே பார்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ், “எங்கள் கட்சியில் அறிவும் அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், வெவ்வேறு கண்ணோட்டங்கள் வெளிப்படுவதை அனுமதிக்கிறோம். மேலும், கட்சிக்குள்ளான தளங்களில் சுதந்திரமான மற்றும் முழுமையான விவாதங்களை நடத்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.
G7 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்தபோது பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகளுக்கு சசி தரூரின் ஆதரவு, அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தது. இதனால், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்தன. ஆனால், ரமேஷ், தரூரின் கருத்துகளை தனிப்பட்ட பார்வையாகக் கருதி, கட்சியின் அடிப்படை ஜனநாயகக் கொள்கைகளுடன் முரண்படாததாக விளக்கினார்.
இதையும் படிங்க : சட்டப்பிரிவு 370 நீக்கம், சியாமளா பிரசாத் கனவு நினைவு.. அமித் ஷா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com