‘யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்’; ட்ரோல் பற்றி.. பிரிவுபசார விழாவில் டி.ஒய். சந்திரசூட்!

Chief Justice Chandrachuds farewell | “நான் யாரையாவது புண்புடுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்” என டி.ஒய். சந்திரசூட் தனது பிரிவுபசார விழாவில் கூறினார்.

Published on: November 8, 2024 at 10:10 pm

Updated on: November 8, 2024 at 10:11 pm

Chief Justice Chandrachuds farewell | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்றுடன் (நவ.8,2024) பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்று பிரிவுபசார நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய டி.ஒய். சந்திரசூட், “பிரிவுபசார சம்பிரதாய நிகழ்ச்சியை எப்போது நடத்த வேண்டும் என்று நீதித்துறை பதிவு அதிகாரி என்னிடம் கேட்டார்.

நான் மதியம் 2 மணியளவில் வைத்துக் கொள்ளலாம் என்றேன். நான் இந்த நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை, ஏனென்றால் நீதிபதி கண்ணாவைப் போன்ற ஒரு நிலையான நபர் பொறுப்பேற்பார். அவர் மிகவும் கண்ணியமானவர்.

சட்டம் மற்றும் வாழ்க்கையைப் பற்றி நான் நடத்திய 45 வழக்குகளில் இன்று வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. தொடர்ந்து, “உங்களில் யாரையாவது நான் எப்போதாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னியுங்கள் என்று கூற விரும்புகிறேன்” என்றார்.

தந்தை குறித்து டி.ஒய். சந்திரசூட்

“எனது தந்தை புனேவில் ஒரு சிறிய பிளாட் வாங்கி, நீதிபதியாக எனது கடைசி நாள் வரை அதை வைத்திருக்கச் சொன்னார். நேர்மையை ஒருபோதும் சமரசம் செய்ய அனுமதிக்காதீர்கள்” என்றார்.

ட்ரோல் பற்றி..

“நான் அநேகமாக மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட நீதிபதிகளில் ஒருவராக இருக்கலாம். திங்கட்கிழமை முதல் என்ன நடக்கும் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்-என்னை ட்ரோல் செய்த அனைவரும் வேலையில்லாமல் போய்விடுவார்கள்.
தொடர்ந்து, “சகோதரர் சஞ்சீவ் உடன் நீண்ட காலம் பணியாற்றிய பிறகு, இந்த நீதிமன்றம் திடமான, நிலையான மற்றும் புத்திசாலித்தனமான கைகளில் உள்ளது என்று என்னால் சொல்ல முடியும்” என்றார்.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com