மும்பை, ஜூன் 23, 2026: தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) முதல் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) ₹30,000 கோடி அளவிலும், ஜியோ முதல் பங்கு வெளியீடு ₹37,700 கோடி அளவிலும் வரவிருக்கின்றன. அந்த வகையில், என்.எஸ்.இ சுமார் ₹5 லட்சம் கோடி மதிப்பீட்டிலும், ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் $137 பில்லியன் (₹11.5 லட்சம் கோடி) மதிப்பீட்டில் பங்குச் சந்தையில் அறிமுகமாகவுள்ளது.
இதில் என்.எஸ்.இ ஐ.பி.ஓ-வை பொறுத்தமட்டில் ₹30,000 கோடி ஓ.எஃப்.எஸ் முறையிலும், ஜியோ ₹37,700 கோடிபுதியவெளியீடு முலமாகவும் வெளியிட உள்ளன. 2026 நிதியாண்டில் என்.எஸ்.இ வருவாய் ₹18,700 கோடி ஆகவும், லாபம் ₹10,302 கோடி ஆகவும் காணப்பட்டது.
ஜியோ ப்ளாட்ஃபார்ம் ஐ.பி.ஓ.-வை பொறுத்தமட்டில் ₹1,46,885 கோடி வருவாய்யும், ₹30,049 கோடி நிகர லாபத்தையும் பெற்றுள்ளது. மேலும், என்.எஸ்.இ-யில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல்.ஐ.சி உள்ளிட்ட நிறுவனங்களும், ஜியோ ப்ளாட்ஃபாமில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் , மெட்டா மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
நிறுவனங்கள் பற்றி..
தேசிய பங்குச் சந்தை ஐ.பி.ஓ இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தை அறிமுகமாகும். ₹30,000 கோடி அளவிலான ஓ.எஃப்.எஸ் மூலம் எஸ்.பி.ஐ, எல்.ஐசி, Temasek, சி.பி.சி.ஐ.பி போன்ற பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்கின்றனர்.என்.எஸ்.இ.க்கு FY26-இல் ₹18,700 கோடி வருவாய் மற்றும் ₹10,302 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் IPO மூலம் நிறுவனம் நேரடி நிதி பெறாது.
மறுபுறம், ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐ.பி.ஒ இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரியது. ₹37,700 கோடி அளவிலான முதல் முறை வெளியீடு மூலம் நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுகிறது. நிதியாண்டு26-இல் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ₹1,46,885 கோடி வருவாய் மற்றும் ₹30,049 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. ஐ.பி.ஓ மூலம் கிடைக்கும் நிதி பெரும்பாலும் ₹27,500 கோடி கடன் குறைப்பதற்கும், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க் முதலீடுகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இந்த இரண்டு முதல் பங்கு வெளியீடுகளும் இந்தியாவின் நிதி சந்தை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சட்டென சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்