சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு.. சென்செக்ஸ் 235 புள்ளிகள் வீழ்ச்சி!

Sensex Nifty Stock Drop: நிதித் துறை பங்குகளின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவைச் சந்தித்தன.

Published on: August 7, 2026 at 1:01 pm

மும்பை, ஆக.07, 2026: மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத் தொடக்கத்தில் 235.36 புள்ளிகள் சரிந்து 78,699.80 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 24.30 புள்ளிகள் சரிந்து 24,608.25 புள்ளிகளாகவும் வீழ்ச்சியடைந்தன. நிதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் சரிவு மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இந்தியப் பங்குச் சந்தையின் இந்த வர்த்தகச் சரிவுக்கு முதன்மைச் சான்றுகளாக அமைந்தன.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டிரென்ட், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல் மற்றும் எடர்னல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவிலான சரிவைச் சந்தித்தன. அதேவேளையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் லாபத்தைப் பதிவு செய்தன.

சர்வதேசச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.16 சதவீதம் உயர்ந்து 83.45 அமெரிக்க டாலராக வர்த்தகமான நிலையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) வியாழக்கிழமையன்று ரூ.17.86 கோடி மதிப்பிலான பங்குகளை நிகரமாக விற்பனை செய்துள்ளனர்.

ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான தூதரகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு நீடிக்கும் என்ற அச்சத்தால் அமெரிக்கப் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்ததாக ஹெச்.எஸ்.டி வெல்த் (HST Wealth) நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான ஹரிசெல்வன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய சந்தைகளில் தென்கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கே ஆகிய குறியீடுகள் சரிந்த நிலையில், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் உயர்வைக் கண்டன.

மேலும், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்சன்ஸ் (F&O) ஒப்பந்தங்களைக் கொண்ட பங்குகளின் இறுதி விலையைக் கண்டறியும் புதிய ‘குளோசிங் ஆக்சன் செஷன்’ (CAS) நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், சந்தையில் மாறுபட்ட போக்கு நிலவி வருகிறது. முன்னதாக, வியாழக்கிழமையன்று சென்செக்ஸ் 373.76 புள்ளிகள் (0.48%) உயர்ந்து 78,954.76 புள்ளிகளிலும், நிஃப்டி 11.35 புள்ளிகள் (0.05%) உயர்ந்து 24,636 புள்ளிகளிலும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத DA உயர்வு.. முழு விவரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com