குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள்.. நெஸ்லே மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 3 வழக்குகள்!

Nestle: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் விவகாரத்தில் Nestle மீது FSSAI 3 வழக்குகள் செய்துள்ளது.

Published on: September 19, 2026 at 2:09 pm

புதுடெல்லி, செப்.19, 2026: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருள்கள் தொடர்பாக விதிமீறல்கள் நடந்ததாகக் கூறி, நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு எதிராக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) 3 தனித்தனி தீர்ப்பாய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

நான் எக்ஸெல்லா ப்ரோ ஸ்டேஜ் (NAN Excella Pro Stage) 1, லாக்டோஜென் ப்ரோ (Lactogen Pro) 1 உள்ளிட்ட 3 குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 2 வழக்குகள், பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு கூற்றுகள் தொடர்பானவை என்றும், மற்றொரு வழக்கு ஆய்வகப் பரிசோதனையில் குறிப்பிட்ட அளவிலான பயோட்டின் சத்து இல்லாதது தொடர்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் யூனிட் I மற்றும் யூனிட் II தயாரிப்பு பிரிவுகளுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் அவற்றுக்கான விளம்பரத் தகவல்களை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆய்வு செய்துள்ளது. குறிப்பாக, இ-காமர்ஸ் தளங்களில் இடம்பெற்றிருந்த தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் விளம்பரக் கூற்றுகள் தொடர்பாக நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டது. நான் எக்ஸெல்லா ப்ரோ ஸ்டேஜ் 1 பொருளில் “5 HMOs” மற்றும் “Whey Protein” என்ற கூற்றுகள் இடம்பெற்றிருந்ததை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல், லாக்டோஜென் ப்ரோ 1 தயாரிப்பில் இடம்பெற்றிருந்த Whey Protein “எளிதில் ஜீரணமாகும்” என்ற விளம்பரக் கூற்றுக்கும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் விளம்பரக் கூற்றுகள் அல்லது விளம்பரப் பொருட்களை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் உள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கான பால் மாற்றுப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட குழந்தை உணவுகளின் விளம்பரம் மற்றும் விற்பனை ஊக்குவிப்புக்கு இந்த சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நெஸ்லே இந்தியா தயாரித்த மற்றொரு ஃபாலோ அப் ஃபார்முலா-வின் மாதிரி ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டபோது, அதில் இருக்க வேண்டிய அளவிலான பயோட்டின் சத்து இல்லை என கண்டறியப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த மாதிரி மறுபரிசோதனைக்காக ரெஃபேரல் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது. அங்கும் 2020-ம் ஆண்டு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பயோட்டின் அளவுக்கான தரநிலைக்கு அந்த தயாரிப்பு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 3 வெவ்வேறு தயாரிப்புகள் தொடர்பாக நெஸ்லே இந்தியா மீது 3 தனித்தனி தீர்ப்பாய வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்களின் தரம், விளம்பரக் கூற்றுகள் மற்றும் விதிமுறை இணக்கம் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு அமைப்புகள் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் விளம்பரம் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொடர்பாக நடைமுறையில் உள்ள சிறப்பு கட்டுப்பாடுகள் கடுமையாகக் கண்காணிக்கப்படுகின்றன. இதனிடையே, நெஸ்லே இந்தியா தனது தயாரிப்புகள் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதாக தெரிவித்துள்ளதுடன், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தனது விளம்பரக் கூற்றுகளை விளக்கிய விதத்தையும் நிறுவனம் மறுத்துள்ளது.

இதையும் படிங்க : தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு.. வெள்ளி விலையும் அதிகரிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com