John Jebaraj POCSO case: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு பாதிரியார் ஜான் ஜெபராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
John Jebaraj POCSO case: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு பாதிரியார் ஜான் ஜெபராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Published on: April 13, 2025 at 11:58 am
Updated on: April 13, 2025 at 12:40 pm
சென்னை ஏப்ரல் 13 2025: கோவையைச் சேர்ந்த மத போதகர் பாதிரியார் ஜான் ஜெபராஜ், பல்வேறு புகழ்பெற்ற கிறிஸ்தவ பாடல்களை பாடி உள்ளார். இதன் மூலம் இவர் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மிக வெகுவாக பிரபலமடைந்தார். இந்த நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இந்த விவகாரம் முதலில் சிறிய அளவு கசிந்த நிலையில், பாதிரியார் ஜான் ஜெபராஜ் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில், அவரின் நண்பர் குறித்தும் ஜான் ஜெபராஜ் பேசி இருப்பார். அதாவது அந்த ஆடியோவில் அன்று என்ன நடந்தது என்பது எனக்கும் உனக்கும் தான் தெரியும். இதற்காக நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் கருணையால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்” என கூறியிருப்பார்.
பாதிரியார் ஜான் ஜெபராஜ்- போக்சோ வழக்கு
முன்னதாக பாதிரியார் ஜான் ஜெபராஜ் சிறுமிகள் சிலருக்கு முத்தமிடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஜான் ஜெபராஜ் க்கும் அவரது நண்பருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து சென்றதாகவும், அதன் பின்னர் தான் இது போன்ற வீடியோக்கள் வெளியானதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 11 மாதங்களாக இவர்கள் என்ன செய்தார்கள்? என்றும் பாதிரியாருக்கு ஆதரவானவர்களால் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
இதற்கிடையில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார்கள். மேலும் ஜான் ஜெபராஜ் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதற்கிடையில் முன் ஜாமீன் கோரி பாதிரியார் ஜான் ஜெபராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜான் ஜெபராஜ், தடைப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜ் இடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறு சிறுமிகள் தரப்பில் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முகாமிட்டிருந்தனர்.
ஜான் ஜெபராஜ் க்கு நீதிமன்ற காவல்
போச்சு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஜான் ஜெபராஜ், 2025 ஏப்ரல் 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஜான் ஜெபராஜ் கேரள மாநிலம் மூணாறில் இன்று ( ஏப்ரல் 13 2025) கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் தலை மறைவு.. மத போதகர் ஜான் ஜெபராஜ் எங்கே?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com