John Jebaraj in a sexual assault case: பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
John Jebaraj in a sexual assault case: பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
Published on: April 10, 2025 at 10:35 am
கோயம்புத்தூர், ஏப்ரல் 10 2025: கோயம்புத்தூரில் உள்ள ஜி என் மில்ஸ் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். 37 வயதான இந்த மத போதகர், வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் கிறிஸ்தவ மத பாடல்களை பாடி பிரபலமாக இருந்து வந்தார். இவரின் பூர்வீகம் திருநெல்வேலியை அடுத்த தென்காசி மாவட்டம் செங்கோட்டை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2024) இவரின் வீட்டில் மத நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
பாலியல் தொந்தரவு
இந்த மத நிகழ்ச்சியில் 14 மற்றும் 17 வயதுடைய இரு பெண்களுக்கு, பாதிரியார் ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் அமைப்பிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் மாயமானார். அவரை போலீசார் வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் போலீசார் தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
இள வயது பாதிரியாராக ஜான் ஜெபராஜ், சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்து வந்தார். இதன் மூலம் இவர் மேலும் சில பெண்களிடமும் பழகி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. முன்னதாக ஜான் ஜெபராஜ் ஆடியோ ஒன்று ரிலீசானது. அந்த ஆடியோவில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து சில சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன. வேறு ஒருவரையும் தொடர்புபடுத்தி அங்கு என்ன நடந்தது என்பது உனக்கும் எனக்கும் தெரியும் என அந்த ஆடியோவில் இருந்தது.
மேலும், “இயேசு கிறிஸ்துவின் கிருபையால் தாம் சென்னையில் இருந்து தப்பிப்பது ஆகவும்; ஓடுவதாகவும் ஜான் ஜெபராஜ் தெரிவித்திருந்தார். இந்த ஆடியோவும் வழக்கில் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. ஜான் ஜெபராஜ் தற்போது பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அவரைப் பிடிக்க போலீசார் பெங்களூரு விரைவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க; பெங்களூருவில் நடந்து சென்ற பெண் மானபங்கம்: ‘இதுவரை புகார் இல்லை’ என்கிறது காவல்துறை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com