திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய 14 வயது சிறுவன்; உயிரை பணயம் வைத்து மீட்ட பாதுகாப்பு பணியாளர்

Rescue: திருச்செந்தூர் கோவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சாத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சரண், திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளர் சிவராஜா கடலில் குதித்து சிறுவனை பத்திரமாக மீட்டார்.

Published on: August 15, 2026 at 1:31 pm

திருச்செந்தூர், ஆக. 15, 2026: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடலில் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், கடலில் குளித்துக்கொண்டிருந்த 14 வயது சிறுவன் ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராட்சத அலையில் சிக்கிய சிறுவன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த சரண் என்ற சிறுவன், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். பின்னர் நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் தத்தளித்தார்.

கடலில் குதித்த பாதுகாப்பு பணியாளர்

சிறுவன் ஆபத்தில் சிக்கியதை கவனித்த கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர் சிவராஜா, உடனடியாக கடலில் குதித்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடல் அலைகளின் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட அவர், தண்ணீரில் தத்தளித்த சரணை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தார். பாறைகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் மீட்பு நடவடிக்கையின்போது சிறுவனுக்கும், பாதுகாப்புப் பணியாளர் சிவராஜாவுக்கும் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

முதலுதவி சிகிச்சை

மீட்கப்பட்ட சிறுவன் சரண் மற்றும் பாதுகாப்புப் பணியாளர் சிவராஜா ஆகிய இருவருக்கும் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக, ஆடி அமாவாசையான கடந்த 12-ம் தேதி திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடி தூரம் வரை உள்வாங்கியிருந்த நிலையில், நேற்று காலை கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி வந்தனர்.

சிவராஜாவுக்கு குவியும் பாராட்டு

கடலில் சிக்கிய சிறுவனை துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்ட பாதுகாப்புப் பணியாளர் சிவராஜாவின் துணிச்சலான செயலை கோவில் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினர். கடல் அலைகள் சீற்றமாக காணப்படும் நேரங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் கடலில் நீராட வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்க: லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம்: சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய்

80-வது சுதந்திர தினம்: ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதல்வர் விஜய்
Flag Hoisting

80-வது சுதந்திர தினம்: ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com