Jharkhand | ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Jharkhand | ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Published on: November 5, 2024 at 2:07 pm
Jharkhand | உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஜார்கண்ட் மாநிலம் கோடெர்மாவில் செவ்வாய்க்கிழமை (நவ.5, 2024) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பேரணியில் உரையாற்றினார். தொடர்ந்து, ஹசாரிபாக் மற்றும் ஜாம்ஷெட்பூரில் இரண்டு கட்சி பேரணிகளில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்ற உள்ளார்.
இந்த நிலையில், யோகி தனது பரப்புரையின்போது, ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தை குறிவைத்து, அதன் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சுட்டிக்காட்டினார். முன்னாள் அமைச்சர் ஆலம்கீர் ஆலமை முகலாய பேரரசர் ஔரங்கசீப்புடன் ஒப்பிட்ட அவர், ஔரங்கசீப் செய்தது போல் ஆலம் மாநிலத்தை கொள்ளையடித்தார் என்றார்.
டெண்டர் மோசடியில் கைது செய்யப்பட்ட ஆலம், இந்த ஆண்டு ஜூன் மாதம் பதவி விலகினார். இது தொடர்பாக பேசிய யோகி, “முன்பு ஔரங்கசீப் நாட்டைக் கொள்ளையடித்தார், அவர் நாட்டின் புனித கோவில்களை அழித்தார், இப்போது என்ன நடக்கிறது, ஜார்க்கண்டில் ஒரு ஆலம்கீர் ஆலம் இருக்கிறார்.
முன்னாள் அமைச்சரும் ஜேஎம்எம் தலைவருமான அவரது வீட்டில் பணம் குவிந்துள்ளது, இதைவிட மோசமான வழி எதுவும் இருக்க முடியாது” என்றார்.
மேலும், “நாட்டின் பாதுகாப்பு, சுயமரியாதை, வேலைவாய்ப்பு, பெண்கள் அதிகாரம் ஆகியவற்றுக்கு பாஜக உத்தரவாதம் அளிக்கிறது. வளர்ச்சிக்கும் பாரம்பரியத்துக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக்கு பாஜக தான் உத்தரவாதம். இன்று பிரதமர் மோடியின் தலைமையை நீங்கள் பார்க்கிறீர்கள். அயோத்தியில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமான தீபத் திருவிழாவைக் கண்டிருப்பீர்கள்.
மக்களை ஏமாற்றியவர்களுக்கு பதில் சொல்லும் நேரம் இந்த தேர்தல். கடந்த காலங்களில் நாட்டு மக்கள் காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அளித்தனர்; ஆனால் அவர்கள் நேர்மையாக எந்த திட்டத்தையாவது செயல்படுத்தினார்களா? ன்றார். தொடர்ந்து, “காஷ்மீருக்கு காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏற்படுத்திய வேதனையான 370வது சட்டப்பிரிவை (ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து) மோடி ஜி நீக்கினார்.
மாஃபியாவுக்கு ஒரே மருந்து பிஜேபிதான். முன்பு உத்தரப் பிரதேசத்தில் மாஃபியா பயத்தின் சூழல் இருந்தது. மாநிலத்தில் புல்டோசர் கர்ஜிக்கத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு குற்றவாளியும் அகற்றப்பட்டுவிட்டனர்” என்றார்.
இதையும் படிங்க : மகாராஷ்டிரா தேர்தல்: ஐக்கிய ஜனதா தளத்தின் விசில் சின்னம் யாருக்கு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com