அர்பன் நக்ஸல் தொடர்பு; போதைப் பொருள்- பொய் வாக்குறுதி: காங்கிரசை வாரிய நரேந்திர மோடி

Narendra Modi | காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்தது; அவர்களின் நிலையை மேம்படுத்தவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Published on: October 5, 2024 at 7:21 pm

Narendra Modi | காங்கிரஸை நகர்ப்புற நக்சல் கும்பல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் ஆபத்தான நிகழ்ச்சி நிரலை முறியடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்தது; அவர்களின் நிலையை மேம்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, “நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டைப் பிரிக்கும் அவர்களின் செயல்திட்டம் தோல்வியடையும் என்று அவர்கள் (காங்கிரஸ்) நினைக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்து அவர்களை ஏழையாக வைத்திருக்க நினைக்கிறது. அவர்களுக்கு, மக்களை பிளவுபடுத்த மட்டுமே தெரியும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். நகர்ப்புற நக்சல் கும்பலால் காங்கிரசை நடத்துகிறது” என்றார்.

மேலும், “இந்தியா மீது நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம். சமீபத்தில் டெல்லியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஒருவரை சந்தேகிக்கிறார்கள்.
இளைஞர்களை போதைப்பொருளுக்குத் தள்ளி கிடைக்கும் பணத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸின் சிந்தனை அந்நியமானது” என்றார்.

இதையடுத்து, “பிரிட்டிஷ் ஆட்சியைப் போல், இந்த காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினரைத் தங்களுக்குச் சமமாக கருதுவதில்லை. இந்தியாவை ஒரே குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பஞ்சாரா சமூகத்தை எப்போதும் இழிவான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்” என்றார்.

மேலும், “பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகள் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை ஊக்கப்படுத்தினர். ஆங்கிலேயர்கள் சமூகத்தைத் துன்புறுத்தினர். காங்கிரஸ் நடத்தும் அரசுகள் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தையும், பாசனத் திட்டங்களையும் ஊழலுக்குப் பயன்படுத்தின.
அவர்களின் பொய் பிரசாத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். தெலுங்கானாவில் கடன் தள்ளுபடிக்காக மக்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியில் துவங்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களை, காங்கிரஸ் அரசு நிறுத்தியது” என்றார்.

இதையும் படிங்க

பிரிக்ஸ் உச்சிமாநாடு ; ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி pm narendra modi to go to Russia for brics summit

பிரிக்ஸ் உச்சிமாநாடு ; ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

BRICS Summit | பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்….

எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் அப்துல் கலாம் – பிரதமர் மோடி he looked for challanges pm modi remembers abdul kalam

எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் அப்துல் கலாம் – பிரதமர் மோடி

PM Modi Remembers Abdul Kalam | முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….

‘ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அனுதாபி கட்சிகளை நிராகரித்த வாக்காளர்கள்’:நரேந்திர மோடி Narendra Modi says Situation in Jammu and Kashmir has vastly changed

‘ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அனுதாபி கட்சிகளை நிராகரித்த வாக்காளர்கள்’:நரேந்திர மோடி

Narendra Modi in Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் பயங்கரவாத அனுதாபி கட்சிகளை நிராகரித்துள்ளனர் என ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில்…

‘நாட்டை துண்டாக்க பேராசைக்காரர்கள் பசியில் இருக்கிறார்கள்’: பிரதமர் நரேந்திர மோடி Prime Minister Narendra Modi said that greedy people are hungry to divide the country

‘நாட்டை துண்டாக்க பேராசைக்காரர்கள் பசியில் இருக்கிறார்கள்’: பிரதமர் நரேந்திர மோடி

Gujarat | Narendra Modi | “நாட்டை துண்டாக்க பேராசைக்காரர்கள் பசியில் இருக்கிறார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் கூறினார்….

‘ஜம்மு காஷ்மீரில் இறுதி மூச்சை இழுக்கும் பயங்கரவாதம்; வம்ச அரசியல்’: பிரதமர் மோடி PM Modi says Terrorism breathing its last in JK

‘ஜம்மு காஷ்மீரில் இறுதி மூச்சை இழுக்கும் பயங்கரவாதம்; வம்ச அரசியல்’: பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பரபரப்புரை ஆற்றினார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com