புதுடெல்லி, பிப்.5, 2026: காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ரயில்வே இணை அமைச்சரான ரவ்நீத் பிட்டு சிங்கை பார்த்து துரோகி என விமர்சித்தார்.
இதனை சீக்கியர்களுக்கு எதிரான அவமரியாதை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, “அவரது அகங்காரம் உச்சத்தில் உள்ளது. காங்கிரஸை விட்டு சென்ற மற்றவர்களை பார்த்து அவர் அவ்வாறு கூறவில்லை. சீக்கியரை பார்த்துதான் அவ்வாறு கூறினார்.
இது சீக்கியர்களுக்கு அவமரியாதை; குருமார்களுக்கு அவமதிப்பு. மேலும், இது காங்கிரஸில் சீக்கியர்களுக்கு எதிராக நிறைந்திருக்கும் வெறுப்பின் வெளிபாடு. அவர் (ராகுல் காந்தி) துரோகி என கூறியவர் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பத்தை சேர்ந்தவர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “மேலும், “அவர் தனது அரசியல் சிந்தனையை மாற்றியதற்காக துரோகியா? இது சிறிய சொல் அல்ல. ஒரு குடிமகனை துரோகி என அழைப்பதை நாடு எப்படி சகித்துக் கொள்ளும்? இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸை மூழ்கடிப்பார்கள்” என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு.. மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்!
Tamil News Updates May 06 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Indian Journalists Win Pulitzer: இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்.கே மற்றும் சுபர்ணா சர்மா, 2026 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதை வென்றுள்ளனர்….
Electronic Gold Receipts: தங்கச் சந்தையை முறைப்படுத்த தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) மின்னணுத் தங்க ரசீதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது….
ICC Ranking: ஐசிசி வெளியிட்ட புதிய டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது….
Seyon: ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்….
VCK Ravikumar: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அவருடன் இணைய வி.சிக. ஆர்வம் காட்டி வருகிறது….