வக்ஃப் திருத்த மசோதா ஆக்கிரமிப்பு பிரச்னையை தீர்க்கும்: கங்கனா ரணாவத்

Waqf Amendment Bill: வக்ஃப் வாரியங்கள் மீது காங்கிரஸ் காட்டிய மெத்தனம், அவர்கள் “விதிகளை மீறுவதற்கு” வழிவகுத்தது என்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்பி கங்கனா ரனாவத் சனிக்கிழமை (ஏப்.5 2025) விமர்சித்தார்.

Published on: April 6, 2025 at 10:00 am

புதுடெல்லி, ஏப்.6 2025: பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத், ”வக்ஃப் வாரியங்கள் மீது காங்கிரஸ் காட்டிய மெத்தனம், அவர்கள் “விதிகளை மீறுவதற்கு” வழிவகுத்தது” எனக் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக மண்டி (உத்தரகண்ட்) தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய கங்கனா ரணாவத், “, சுதந்திரத்திற்கு முன்பே வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு “பெரிய சதி” இருக்கிறது என்றார்.

மேலும் இன்று நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த வகுப்பு வாரியங்கள் காரணமாக இருக்கின்றன எனக் கூறிய கங்கன ராணாவத், “வக்பு வாரிய திருத்தச் சட்டம் நாட்டின் பல பிரச்சனைகளை தீர்க்கும்” என்றார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஆதரவு ஏன்? ஜே.டி.யூ பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com