Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.
இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Ram Rahim: பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில், தேரா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்….
Su-30 Fighter Jet Crash அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்கிலாங் மாவட்டத்தில் நடந்த சு-30 எம்.கே.ஐ (Su-30MKI) போர் விமான விபத்தில் இந்திய விமானப்படை (IAF) வீரர்கள்…
CM Siddaramaiah : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்ததன்படி, 16 வயதிற்குக் குறைவான மாணவர்களுக்கு சமூக ஊடக அணுகலைத் தடை செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட…
Taranjit Singh Sandhu: டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்….
Rajya Sabha Elections 2026: மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸின் 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்….
Bihar CM Nitish Kumar : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்