Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.
இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Naxals shot dead in Chhattisgarh | சத்தீஸ்கரின் தெற்கு பிஜாப்பூரில் உள்ள ஒரு காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், …
Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது….
SpaDeX docking experiment : ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வளர்ந்த நாடுகளின் உயரடுக்குக் குழுவில் இந்தியாவும்…
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜில் ரயில் நிலைய கூரை பலகை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது….
Pathanamthitta girl assault case | தடகள வீராங்கனையான அந்தப் பெண் தனது அண்டை வீட்டார், பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உள்ளிட்ட…
Madhya Pradesh | தாலி கட்டாமல் லிவிங்கில் வாழ்ந்த பெண்ணின் உடல் வீட்டு பிரீஜ்-ஜில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்