நெருங்கும் பண்டிகை காலம்.. சொந்த ஊர் திரும்பும் 1 கோடி பேர்: 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தசரா, தீபாவளி உள்ளிட்ட சிறப்பு பண்டிகையை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.

Published on: September 27, 2024 at 11:30 pm

Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.

இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

பத்திரிக்கையாளர் கொலை.. பிரபல சாமியார் விடுவிப்பு..! Ram Rahim

பத்திரிக்கையாளர் கொலை.. பிரபல சாமியார் விடுவிப்பு..!

Ram Rahim: பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில், தேரா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்….

அஸ்ஸாமில் நொறுங்கி விழுந்த விமானம்.. இரு விமானிகள் உயிரிழப்பு.. யார் இவர்கள்? Su-30 Fighter Jet Crash

அஸ்ஸாமில் நொறுங்கி விழுந்த விமானம்.. இரு விமானிகள் உயிரிழப்பு.. யார் இவர்கள்?

Su-30 Fighter Jet Crash அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்கிலாங் மாவட்டத்தில் நடந்த சு-30 எம்.கே.ஐ (Su-30MKI) போர் விமான விபத்தில் இந்திய விமானப்படை (IAF) வீரர்கள்…

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை… சித்த ராமையா CM Siddaramaiah

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை… சித்த ராமையா

CM Siddaramaiah : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்ததன்படி, 16 வயதிற்குக் குறைவான மாணவர்களுக்கு சமூக ஊடக அணுகலைத் தடை செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட…

முன்னாள் அமெரிக்க தூதர்….இன்று டெல்லி துணை நிலை ஆளுநர்.. யார் இந்த தரஞ்சித் சிங் சந்து? Taranjit Singh Sandhu

முன்னாள் அமெரிக்க தூதர்….இன்று டெல்லி துணை நிலை ஆளுநர்.. யார் இந்த தரஞ்சித்

Taranjit Singh Sandhu: டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்….

மாநிலங்களவை தேர்தல்.. காங்கிரஸின் 6 வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்! Rajya Sabha Elections 2026

மாநிலங்களவை தேர்தல்.. காங்கிரஸின் 6 வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்!

Rajya Sabha Elections 2026: மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸின் 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்….

நிதிஷ் குமார் ராஜ்யசபா வேட்புமனு தாக்கல்.. மார்ச் 16 அன்று வாக்குப்பதிவு! Bihar CM Nitish Kumar

நிதிஷ் குமார் ராஜ்யசபா வேட்புமனு தாக்கல்.. மார்ச் 16 அன்று வாக்குப்பதிவு!

Bihar CM Nitish Kumar : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com