Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.
இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Jairam Ramesh : தி.மு.க எம்பிக்கள் உடன் தொடர்பில் இருக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்….
Supreme Court of India: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அவர் ஏழை என்பதால் மருத்துவ சிகிச்சையை புறக்கணித்து விட்டீர்களா? என உச்ச…
Narendra modi: நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17, 2026) தொடங்கிவைத்தார்….
Bill on Vande Mataram : வந்தே மாதரம் பாடலை அவமதித்தால், தண்டனை வழங்கும்படி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
Narendra modi: ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17,…
TN Poll Plea : தமிழக தேர்தல் மனுக்களை விரைந்து முடிக்க கோரிய பொதுநல மனு தொடர்பாக உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்