புனேயில் குப்பை மேடு சரிந்து 9 பேர் பலி… தனியார் நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்குபதிவு!

Pune Building Collapse: புனே அருகே குப்பை மேடு சரிந்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆண்டனி லாரா ரினியூவபிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published on: July 14, 2026 at 1:05 pm

புனே, ஜூலை 14 2026: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பிம்ப்ரி சின்ச்வாட் (Pimpri Chinchwad) மோஷி பகுதியில் உள்ள கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் (Waste-to-Energy) ஆலையில் கடந்த ஜூலை 8 அன்று மூன்று மாடி நிர்வாகக் கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நிறுவனத்தின் இரு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆண்டனி லாரா ரினியூவபிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் திட்டத் தலைவர் அசோக் குப்தா மற்றும் பாதுகாப்பு அதிகாரி விஜய் சப்கல் ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 105-வது பிரிவு (கொலைக்கு இணையாகாத குற்றப்பூர்வ மனித உயிரிழப்பு), 125-வது பிரிவு (அலட்சியத்தால் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி (PCMC) அளித்த புகாரின்படி, தொடர் கனமழையால் அருகிலிருந்த பழைய குப்பைக் குவியல் (Sanitary Landfill / Legacy Waste Mound) சரிந்து விழும் அபாயம் இருந்தது தெரிந்தும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக குப்பை மேடு நிலச்சரிவு போல் சரிந்து, அதன் அருகிலிருந்த மூன்று மாடி நிர்வாகக் கட்டிடத்தின் மீது விழுந்து 9 பேரின் உயிரைப் பறித்ததாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், அந்த கட்டிடத்திற்கு தரைத்தளத்திற்கு மட்டுமே பயன்பாட்டு சான்றிதழ் (Occupancy Certificate) வழங்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், கட்டிடம் மூன்று மாடிகளாக பயன்படுத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட அம்சங்களும் விசாரணையில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சம்பவம் குறித்து முழுமையான தொழில்நுட்ப விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு சுயாதீன உயர் மட்ட தொழில்நுட்பக் குழுவை அமைத்துள்ளது. மண்டல ஆணையர் ஷீதல் தேலி-உகாலே தலைமையிலான இந்தக் குழுவில், மகாராஷ்டிர மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய அதிகாரி, ஐஐடி பம்பாய் கட்டமைப்பு பொறியியல் துறை பேராசிரியர் டி.என். சிங், சுற்றுச்சூழல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நிபுணர் அனில் குமார் தீட்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் பரிந்துரைகளையும் இக்குழு அரசுக்கு வழங்க உள்ளது.

இதையும் படிங்க டெல்லியில் நடுரோட்டில் பயங்கரம்.. மனைவியை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com