UNSC 2028 : 2028-29 காலகட்டத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் தொடங்கி வைத்தார்.
UNSC 2028 : 2028-29 காலகட்டத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் தொடங்கி வைத்தார்.

Published on: July 14, 2026 at 1:46 pm
நியூயார்க், ஜூலை 14 2026: ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) 2028-29 காலகட்டத்திற்கான நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் சமமான வளர்ச்சியை முன்னெடுக்கும் இந்தியாவின் ‘SHANTI’ (Securing Holistic Advancement through Norms, Trust and Integrity) என்ற புதிய தொலைநோக்கு அணுகுமுறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
உலகம் தற்போது அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் நிலையற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இத்தகைய காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், சர்வதேச பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அணுகுமுறையையே இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், உலக தெற்கு நாடுகளின் (Global South) குரலை உலக அரங்கில் தொடர்ந்து ஒலிக்கச் செய்துள்ளதாகவும் கூறினார்.
Pleased to launch India’s campaign for the @UN Security Council 2028-29.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 13, 2026
Underlined 🇮🇳’s approach rooted in SHANTI – Securing Holistic Advancement through Norms, Trust and Integrity.
We will prioritise :
➡️ Strengthening the Voice of Global South, and factoring its concerns… pic.twitter.com/pGOHJho5fC
இந்தியாவின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய அவர், ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் இதுவரை சுமார் 3 லட்சம் இந்திய வீரர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார். தற்போது 10 ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் 4,300-க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் சேவையாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அனுபவமும் பொறுப்பான அணுகுமுறையும் பாதுகாப்பு கவுன்சிலின் முடிவெடுக்கும் செயல்முறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2028-29 காலகட்டத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்றால், 2028 முதல் இரண்டு ஆண்டுகள் இந்தியா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக செயல்படும். இதற்கு முன்பு இந்தியா 8 முறை இந்தப் பதவியை வகித்துள்ளது. கடைசியாக 2021-22 காலகட்டத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க குவைத், ஜோர்டான், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்.. வளைகுடா நாடுகளில் பதற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com