Congress corporator shot dead | உஜ்ஜெயின்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில் இன்று (அக்.11, 2024) அதிகாலை 5 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஹாஜி கலீம் கான் (60) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில், நிலத் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் மேற்கொண்டு வழக்கு விசாரணையை நடத்திவருகிறார்கள். இதற்கிடையில் நிலத்தகராறு விவகாரத்தில் கான் மீது ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் உஜ்ஜெயினி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீல்கங்கா காவல் நிலைய போலீசார் வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க
Woman Killed in namakkal: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 7…
Coimbatore Blast Case: 2022 கோவை குண்டுவெடிப்பு வழக்கில், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
Grindr scams: கிரெண்டர் செயலியால் தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது….
Jewellery Theft: கும்பகோணத்தில் அண்டை வீட்டில் அடிக்கடி வந்து பழகிய இளம்பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி 21 கிராம் நகையை திருடியதாக போலீஸ் விசாரணையில்…
UK Crime: இங்கிலாந்தில் இளைஞர் கொலை வழக்கில், தனது மகன் பயன்படுத்திய கொலை ஆயுதத்தை சம்பவ இடத்திலிருந்து அகற்றி விசாரணைக்கு இடையூறு செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்