அர்பன் நக்ஸல் தொடர்பு; போதைப் பொருள்- பொய் வாக்குறுதி: காங்கிரசை வாரிய நரேந்திர மோடி

Narendra Modi | காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்தது; அவர்களின் நிலையை மேம்படுத்தவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Published on: October 5, 2024 at 7:21 pm

Narendra Modi | காங்கிரஸை நகர்ப்புற நக்சல் கும்பல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் ஆபத்தான நிகழ்ச்சி நிரலை முறியடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்தது; அவர்களின் நிலையை மேம்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, “நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டைப் பிரிக்கும் அவர்களின் செயல்திட்டம் தோல்வியடையும் என்று அவர்கள் (காங்கிரஸ்) நினைக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்து அவர்களை ஏழையாக வைத்திருக்க நினைக்கிறது. அவர்களுக்கு, மக்களை பிளவுபடுத்த மட்டுமே தெரியும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். நகர்ப்புற நக்சல் கும்பலால் காங்கிரசை நடத்துகிறது” என்றார்.

மேலும், “இந்தியா மீது நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம். சமீபத்தில் டெல்லியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஒருவரை சந்தேகிக்கிறார்கள்.
இளைஞர்களை போதைப்பொருளுக்குத் தள்ளி கிடைக்கும் பணத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸின் சிந்தனை அந்நியமானது” என்றார்.

இதையடுத்து, “பிரிட்டிஷ் ஆட்சியைப் போல், இந்த காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினரைத் தங்களுக்குச் சமமாக கருதுவதில்லை. இந்தியாவை ஒரே குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பஞ்சாரா சமூகத்தை எப்போதும் இழிவான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்” என்றார்.

மேலும், “பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகள் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை ஊக்கப்படுத்தினர். ஆங்கிலேயர்கள் சமூகத்தைத் துன்புறுத்தினர். காங்கிரஸ் நடத்தும் அரசுகள் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தையும், பாசனத் திட்டங்களையும் ஊழலுக்குப் பயன்படுத்தின.
அவர்களின் பொய் பிரசாத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். தெலுங்கானாவில் கடன் தள்ளுபடிக்காக மக்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியில் துவங்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களை, காங்கிரஸ் அரசு நிறுத்தியது” என்றார்.

இதையும் படிங்க

9.44 கோடி விவசாயிகள் பயன்.. பிஎம் கிஷான் நிதி ₹18,880 கோடியை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி! PM-KISAN Scheme

9.44 கோடி விவசாயிகள் பயன்.. பிஎம் கிஷான் நிதி ₹18,880 கோடியை விடுவித்த

PM-KISAN Scheme : பிரதமர் நரேந்திர மோடி, PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் மேற்பட்ட…

உடல் நலம் முதல் மன அமைதி வரை.. உடலைச் செழுமைப்படுத்தும் யோகா.. பிரதமர் நரேந்திர மோடி! International yoga day 2026

உடல் நலம் முதல் மன அமைதி வரை.. உடலைச் செழுமைப்படுத்தும் யோகா.. பிரதமர்

International yoga day 2026 : உடல் நலம் முதல் மன அமைதி வரை யோகா ஒருவரின் உடலை செழுமைப்படுத்துகிறது என கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி…

உலகின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா உருவெடுத்து வருகிறது: பாரிஸில் பிரதமர் மோடி பேச்சு Narendra modi France Visit

உலகின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா உருவெடுத்து வருகிறது: பாரிஸில் பிரதமர் மோடி பேச்சு

Narendra modi France Visit : பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா உலக நாடுகளின் நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்….

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயர்ந்த அங்கீகாரம் Slovakia Honours PM Modi

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயர்ந்த அங்கீகாரம்

Slovakia Honours PM Modi : ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய அரச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி….

மோடியை சந்திக்கும் ட்ரம்ப்.. ஜி7 மாநாடு.. பரபரப்பு தகவல்கள்! G7 France summit

மோடியை சந்திக்கும் ட்ரம்ப்.. ஜி7 மாநாடு.. பரபரப்பு தகவல்கள்!

G7 France summit : பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com