பணம், பேராசை, ஆள்மாறாட்டம்: திருநெல்வேலி தலைமை காவலர் பெண்ணுடன் கைது!

Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 6, 2024 at 1:22 pm

Tirunelveli Head Constable Arrest | திருநெல்வேலி நகரக் காவல்துறையில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவரும், பெண் ஒருவரும் ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சனிக்கிழமை (அக்.5,2024) கைது செய்யப்பட்டனர். முன்னதாக, மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சசிகுமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம், வி.கே.புதூரை சேர்ந்தவர் முருகராஜ், 41. இவர், திருநெல்வேலி சந்திப்பு போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் குடும்பம் பாளையங்கோட்டையில் உள்ள வி.எம் சத்திரத்தில் வசித்துவருகிறார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி (40) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இருவரும் வருவாய்த் துறை மற்றும் பிறரிடம் பட்டா பெற்றுத் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் சசிகுமாரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அப்போது, வளர்மதி தன்னை மாவட்ட வருவாய் அலுவலராகக் கூறி, பட்டா மாறுதல் மற்றும் புறம்போக்கு நிலங்களுக்கு ஆவணங்கள் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. அதை உண்மை என நம்பிய சசிகுமார், மதுரையில் ஒரு நிலத்திற்கு பட்டா வழங்குவதற்காக ₹10 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வளர்மதி பணமோ அல்லது பட்டாவோ வழங்கவில்லை. சிக்கலில் சிக்கிய முருகராஜ், காசோலை கொடுத்துள்ளார். எனினும் இதில் பணம் இல்லை. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கைது செய்தார். இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க

திருநெல்வேலி அல்வா விலை உயர்வு.. நியூ ரேட் என்ன தெரியுமா? Tirunelveli Halwa Price Hiked

திருநெல்வேலி அல்வா விலை உயர்வு.. நியூ ரேட் என்ன தெரியுமா?

Tirunelveli Halwa Price Hiked : திருநெல்வேலி அல்வா கிலோ ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது; இந்த நிலையில் புதிய விலை குறித்து பார்க்கலாம்….

திருநெல்வேலியில் ஆகஸ்ட் 25-ல் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியுமா? Power Cut

திருநெல்வேலியில் ஆகஸ்ட் 25-ல் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Power Cut: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி காலை…

கங்கைகொண்டானில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்.. சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட போலீசாருக்கு பாராட்டு! Ganja Seized in Tirunelveli

கங்கைகொண்டானில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்.. சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட போலீசாருக்கு

Ganja Seized in Tirunelveli : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள்…

திருநெல்வேலி-சென்னை வாராந்திர சிறப்பு ரயில். முழு விவரம்- நோட் பண்ணுங்க! Special Train

திருநெல்வேலி-சென்னை வாராந்திர சிறப்பு ரயில். முழு விவரம்- நோட் பண்ணுங்க!

Special Train: திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது….

திருநெல்வேலி, தூத்துக்குடியில் விண்வெளித் துறை முதலீட்டு மண்டலம்.. தமிழ்நாடு அரசு Space Industry Zone

திருநெல்வேலி, தூத்துக்குடியில் விண்வெளித் துறை முதலீட்டு மண்டலம்.. தமிழ்நாடு அரசு

Space Industry Zone : திருநெல்வேலி, தூத்துக்குடியில் விண்வெளித் துறை முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com