அதே திரைக்கதை… அதே வசனம்; திமுக அரசின் சமூக நீதி மோசடி: ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss | அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா? என ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: October 6, 2024 at 12:59 pm

Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது.

ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசின் சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவத்தின் விவரங்களை தமிழக அரசு வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசு நினைத்தால் அந்த விவரங்களை ஒரு வாரத்தில் திரட்டி விட முடியும். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி சூறையாடல்கள் நடப்பதால் தான் அவை குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

மடியில் கனமில்லை என்றால் திராவிட மாடல் அரசுக்கு வழியில் பயம் தேவையில்லை. சில சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு அதிகமாகவும், வன்னியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகையை விட மிகவும் குறைவாகவும் பிரதிநிதித்துவம் இருப்பதால் தான் இந்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்பது இதிலிருந்து உறுதியாகியுள்ளது.

வன்னிய மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும், மீண்டும் அந்த மக்களுக்கு துரோகங்களையும், சமூக அநீதியையும் தான் இழைத்து வருகிறது. அதனால் தான், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்கும் வகையில் பொய்யான, திரிக்கப்பட்ட, அரைகுறையான புள்ளி விவரங்களை வெளியிட்டு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து அதுகுறித்து பத்தி பத்தியாக செய்தி வெளியிடச் செய்த தமிழக அரசு, அனைத்து சமூகங்களுக்குமான 35 ஆண்டுகால புள்ளி விவரங்களை வெளியிட மறுக்கிறது. தங்களின் சமூகநீதி முகத்திரை கிழிந்து விடும் என்று அஞ்சுகிறது.

உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக, பொம்மையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு, திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும்.

திராவிட மாடல் ஏமாற்று அரசு அணிந்திருக்கும் சமூகநீதி முகமூடியை கிழித்து அதன் சமூகநீதி மோசடிகளை அம்பலப்படுத்தும். மக்கள் மன்றத்தில் திமுகவின் சமூகஅநீதிகளை தோலுரித்து சரியான பாடம் புகட்டப்படுவதை உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

அன்புமணி, கிறிஸ்டோபர் உள்பட 19 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு.. சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம்! VP Radhakrishnan Swears In 19 New Rajya sabha Members

அன்புமணி, கிறிஸ்டோபர் உள்பட 19 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு.. சி.பி. ராதாகிருஷ்ணன்

New Rajya sabha Members: பா.ம.க. அன்புமணி ராமதாஸ், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக் உள்பட 19 புதிய எம்.பி.க்கள் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டனர்….

ராமதாஸ் வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்.. வந்தவாசியில் பரபரப்பு! Assembly election 2026

ராமதாஸ் வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்.. வந்தவாசியில் பரபரப்பு!

Assembly election 2026: ராமதாஸ் ஆதரவு வேட்பாளர், வந்தவாசியில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

மாம்பழ சின்னம்.. தேர்தல் ஆணையம் பாரபட்சம்.. ராமதாஸ் குற்றச்சாட்டு! Ramadoss Slams EC on Mango Symbol Row

மாம்பழ சின்னம்.. தேர்தல் ஆணையம் பாரபட்சம்.. ராமதாஸ் குற்றச்சாட்டு!

Ramadoss Slams EC on Mango Symbol Row: மாம்பழ சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடக்கிறது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்….

கியாஸ் உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா? மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி Stalin Faces Query on LPG Relief

கியாஸ் உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா? மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி

Stalin Faces Query on LPG Relief: “2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக…

தமிழ்நாட்டில், 5 முனைப்போட்டி.. உருவானது புதிய கூட்டணி! Assembly Election 2026

தமிழ்நாட்டில், 5 முனைப்போட்டி.. உருவானது புதிய கூட்டணி!

Assembly Election 2026: பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ்- சசிகலா கட்சிகளுக்கு இடையே புதிய கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com