GK vasan: மேகதாதுவில் காங்கிரஸ் அரசாங்கம் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் தடுக்க வேண்டும் என ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
GK vasan: மேகதாதுவில் காங்கிரஸ் அரசாங்கம் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் தடுக்க வேண்டும் என ஜி.கே வாசன் கூறியுள்ளார்.

Published on: June 15, 2026 at 12:24 pm
சென்னை, ஜூன் 15, 2026: சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின் தலைவர் ஜி.கே.வாசன், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேகதாது அணை விவகாரத்தில், தவெக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மூலம் கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டைக் கட்டுப்படுத்த பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனுடன், மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளில் அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் இடம்பெற்றது.
மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ், மக்களின் நலனுக்காக சுயமாகவும் வலுவாகவும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : பா.ஜ.க.வுக்கு டாட்டா போட்ட த.மா.கா.. என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com