காவல் சீருடையில் எஸ்.ஐ தற்கொலை.. தீயாய் பரவும்.. அதிர்ச்சி சம்பவம்!

Sub Inspector Nayab Khan: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட, காவல் உதவி ஆய்வாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: March 6, 2025 at 2:25 pm

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சுவார் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் நயாப் கான்.
50 வயதான நயாப் கான் இரு மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், காவல் நிலைய பாசறை பகுதியில் புதன்கிழமை (மார்ச் 5, 2025) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் காவல் உதவி ஆய்வாளர் சீரூடையில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி வித்யா சாகர் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நயாப் கான் இரு மனைவிகளுடன் வசித்து வந்தார். இவர் ஃபருக்காஃபாத்தில் உள்ள காம்பில் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இவரின் குடும்பத்தினர் பெரெய்லி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். புதன்கிழமை அவரிடம் இருந்து எந்த வித போனும் வரவில்லை.

இதையடுத்து பதறி போன குடும்பத்தினர் ராம்பூர் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டனர். இந்த நிலையில் அவர் காவல் பாசறை பகுதியில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் என்றார்.
காவல் நிலைய பாசறை பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வீடியோவில் அதிர்ச்சியூட்டும் உள்ளடக்கங்கள் இருந்ததால் பகிரவில்லை.

தற்கொலை விழிப்புணர்வு: தற்கொலை எந்தப் பிரச்னையும் தீர்வல்ல.
தமிழ்நாடு

சினேகா இந்தியா அறக்கட்டளை
+91 044-24640050 | 24 மணி நேரம் | திங்கள் முதல் ஞாயிறு வரை
+91 044-24640060 | காலை 08:00 – இரவு 10:00 | திங்கள் முதல் ஞாயிறு வரை
சென்னை

மருத்துவ உதவி எண்
104
24×7
தமிழ்நாடு

இதையும் படிங்க நான் கஞ்சா புகைப்பேன்.. சர்ச்சையில் சிக்கிய ஐஐடி பாபா.. வழக்குப்பதிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com