புதுடெல்லி, ஜுன் 27 2026 : அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வருகைக்கான திட்டங்கள் தயாராகி வருவதை அமெரிக்க செனட்டர் ரூபியோ உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல், பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. அப்போது டிரம்ப்,அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த பயணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல், பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. அப்போது அவர் இந்தியத் தலைவரைப் புகழ்ந்து பேசியதோடு, இந்தியாவுக்கு வருகை தரும் திட்டங்கள் குறித்தும் சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது, வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், ஆற்றல் துறை முதலீடுகள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த கூட்டான்மையை மேலும் வலுப்படுத்தும். இந்தியா–அமெரிக்கா உறவுகள், ஆசியா–பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வருகை, இரு நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க மகாசாகர் தொலைநோக்குப் பார்வை.. சேஷல்ஸ் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்