Telangana | தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்சசையாகின. இவர் நடிகர் நாகசைதன்யா, சமந்தா காதல் திருமணம் விவாகரத்து குறித்து பேசினார். அப்போது இதற்கு காரணம் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்றார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் சுரேகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி, தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் சுரேகா, “பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி ராமா ராவ் நடிகைகளின் போன்களை ஒட்டுக்கேட்பார். பின்னர் அவர்களின் பலவீனங்களை கண்டறிந்து பிளாக்மெயில் செய்வார். நடிகை சமந்தா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. இது நாக சைதன்யா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்திலும் சமந்தா பெயரை இழுத்துப் பேசி இருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் முன்னணி நடிகர்கள் ஆவார்கள். மேலும், தெலுங்கு திரையுலகில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமான அக்கினேனியை சேர்ந்தவர் நாக சைதன்யா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
VB – G RAM G Bill: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்…
Shobha Karandlaje: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்னமும் குழந்தையாகவே இருக்கிறார் என மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான சோபா…
Shivraj Patil: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது 91வது வயதில் இன்று (டிச.12, 2025) மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்….
Sampath Singh resigned: ஹரியானா மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவர் சம்பத் சிங், பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்….
Rahul Gandhi: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார் என்றாலும், அவரின் ரிமோட் கண்ட்ரோல் பா.ஜ.க.விடம் உள்ளது என காங்கிரஸ் மூத்தத் தலைவர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்