Telangana | தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்சசையாகின. இவர் நடிகர் நாகசைதன்யா, சமந்தா காதல் திருமணம் விவாகரத்து குறித்து பேசினார். அப்போது இதற்கு காரணம் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்றார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் சுரேகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி, தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் சுரேகா, “பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி ராமா ராவ் நடிகைகளின் போன்களை ஒட்டுக்கேட்பார். பின்னர் அவர்களின் பலவீனங்களை கண்டறிந்து பிளாக்மெயில் செய்வார். நடிகை சமந்தா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. இது நாக சைதன்யா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்திலும் சமந்தா பெயரை இழுத்துப் பேசி இருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் முன்னணி நடிகர்கள் ஆவார்கள். மேலும், தெலுங்கு திரையுலகில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமான அக்கினேனியை சேர்ந்தவர் நாக சைதன்யா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Congress corporator shot dead | காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்….
Jharkhand | டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார்….
ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது….
Mallikarjun Kharge | நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் சாக மாட்டேன் என ஜம்மு காஷ்மீல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்….
Jammu and Kashmir | Congress | ஜம்மு காஷ்மீரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்