புதுடெல்லி, பிப்.3, 2026: மக்களவையில், பரபரப்பான சூழ்நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்:
1) குர்ஜீத் ஆஜ்லா
2) ஹிபி ஈடன்
3) மணிக்கம் தாகூர்
4) பிரஷாந்த் யடோராவ் படோலே
5) கிரண் குமார் ரெட்டி
6) டீன் குரியாகோஸ்
7) அமரிந்தர் சிங் ராஜா வாரிங்
8) எஸ். வெங்கடேசன்
இந்த நடவடிக்கை, மக்களவையில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பும் குழப்பமும் காரணமாக எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, “எனக்கு பேச அனுமதி தரவில்லை; பிரதமர் மோடி பயப்படுகிறார். நான்கு மாதங்களாக நின்றிருந்த வர்த்தக ஒப்பந்தம், நேற்று மாலை திடீரென கையெழுத்திடப்பட்டுள்ளது.
பிரதமருக்கு மிகுந்த அழுத்தம் உள்ளது; ₹1,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ‘இமேஜ் பலூன்’ உடைந்து போகலாம். பிரதமர் மோடி சமரசம் செய்யப்பட்டுள்ளார். யார், எப்படி சமரசம் செய்தார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்” என்றார்.
மேலும் ராகுல் காந்தி, பிரதமரின் தனிப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தனிப்பட்ட புகழ் உருவாக்கம் குறித்து விமர்சனம் செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியுரிமை தகவலை நாகரீகமாக திருடும் வாட்ஸ்அப்.. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
Tiruvallur Tragedy : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும்…
MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில்…
Force Motors Feat : ஃபோர்ஸ் மோட்டார்ஸ், புனேவில் உள்ள சக்கான் ஆலையில் 2,00,000-வது மெர்சிடிஸ்-பென்ஸ் இன்ஜினை தயாரித்து முக்கிய உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. 1997 முதல்…
Samantha : நடிகை சமந்தா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன….
PM-KISAN Scheme : பிரதமர் நரேந்திர மோடி, PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் மேற்பட்ட…
IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்