சென்னை பிப்ரவரி 3, 2026; திமுக நிறுவனர் அண்ணா ஆட்சியில், ஊழல் இல்லை என கூறிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ” அண்ணா என்ற பசு மீது அமர்ந்திருக்கும் காக்கா தான் இன்றைய திமுக” எனவும் விமர்சித்தார்.
தொடர்ந்து இன்றைய திமுக ஆட்சி மக்களிடமிருந்து பிடுங்கி தின்கிறது; அண்ணாவின் குடும்பம் அரசியல் பக்கமே வரவில்லை.
ஆனால் இன்று முதல்வர் அவரது மகன் பேரன் என அனைவரும் அரசியலுக்கு வந்து அண்ணாவின் வழியை பின்பற்றுகிறோம் எனக் கூறுகிறார்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அன்று ஊழல் இல்லை இன்று ஊழல் இருக்கிறது” என்றார்.
அமைச்சர்களுக்கு அண்ணாவைப் பற்றி தெரியாது
தொடர்ந்து திமுக அமைச்சர்களை விமர்சித்த அண்ணாமலை, ” திமுக அமைச்சர்களுக்கு அண்ணாவைப் பற்றி எதுவும் தெரியாது; அவரைப் பற்றி ஒரு பத்து வரிகள் எழுதுங்கள் என்று சொன்னால் திணறுவார்கள். அண்ணா அண்ணா என அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மட்டும் பேசுவார்கள்” என்றார்.
தேர்தல் பொறுப்பு குறித்து விளக்கம்
தேர்தல் தொகுதி பொறுப்பு குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, “கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்; இந்த நேரத்தில் என் தந்தையின் உடல்நிலையை நான் பார்த்துக்கொள்ள வேண்டும்; எனவேதான் அதிகமாக கோவை பகுதியில் இருக்கிறேன்; தந்தை டயாலிசிஸில் இருக்கிறார்; அவரை பார்த்துக்கொள்வது எனது முதல் கடமை
அதனால், அடிப்படை வேலைகளை என்னால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை; அதிகமாக டிராவல் செய்ய முடியாது என்ற வேண்டுகோளை வைத்துள்ளேன்; கட்சியும் அதனை ஏற்றுக்கொண்டு வேறுவேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள்” என்றார்.
பரப்புரை சொல்வேன்
தொடர்ந்து, “அதேநேரத்தில் பிரசாரம், வேறு என்ன சொல்கிறார்களோ அதை செய்யத் தயாராக இருக்கிறேன்; கட்சி, பாஜக வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும். அதிமுக உட்பட கூட்டணி கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி சொல்வதை செய்வோம்” எனவும் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.
இதையும் படிங்க; சீரழித்த சினிமா.. டீ கடையில் வேலை.. சென்னையில் தாய்-மகனுக்கு நேர்ந்த கொடுமை!
EPS Holds Key Meet : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
Tiruvallur Tragedy : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும்…
MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில்…
Force Motors Feat : ஃபோர்ஸ் மோட்டார்ஸ், புனேவில் உள்ள சக்கான் ஆலையில் 2,00,000-வது மெர்சிடிஸ்-பென்ஸ் இன்ஜினை தயாரித்து முக்கிய உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. 1997 முதல்…
Samantha : நடிகை சமந்தா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன….
PM-KISAN Scheme : பிரதமர் நரேந்திர மோடி, PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் மேற்பட்ட…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்