தலித்துகளை தாக்கிய உயர் சாதியினர் 98 பேருக்கு ஆயுள்: மரகும்பி சாதி கலவரத்தில் நடந்தது என்ன?

Marakumbi caste case | மரகும்பி சாதி கலவரத்தில் உயர் சாதியினர் 98 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Published on: October 25, 2024 at 3:05 pm

Updated on: October 25, 2024 at 11:20 pm

Marakumbi caste case | கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி தாலுக்காவில் உள்ள மரகும்பி கிராமத்தில் தலித்துகள் மற்றும் உயர் சாதியினருக்கு இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்துவந்தது. இந்த நிலையில், ஆக.28ஆம் தேதி 2014ல் இந்தப் பிரச்னை சிக்கலானது. அன்றைய தினம், கொப்பளத்தில் உள்ள ஷிவா டாக்கீஸில் சினிமா டிக்கெட் வாங்குவது தொடர்பாக பிரச்னை வன்முறையாக மாறியது.

இதில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதாவது, செங்கல், கற்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்தியபடி, தலித்துகள் காலனிக்கு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பீமேஷ் அளித்த புகாரின் பேரில், கங்காவதி கிராமப்புற காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து கங்காவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் வழக்குப் பதிந்து விசாரித்தார். முதலில், புகாரில் ஒரு சிலரை மட்டுமே குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால், விசாரணையில் மற்ற குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி குற்றப்பத்திரிகையில், இரண்டு சிறார்கள் உட்பட 117 பேர் குற்றம் சாட்டப்பட்னர்.

இந்த வழக்கில், கொப்பல் சிறார் நீதி வாரியத்தில் தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 47 சாட்சிகளில் 38 பேரை அரசு தரப்பு விசாரித்தது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த கொப்பலில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் 98 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் ₹5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், மீதமுள்ள மூவரும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு சட்டம் பொருந்தாது. அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட 117 பேரில் 101 பேரை அக்டோபர் 21ஆம் தேதி குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி சி.சந்திரசேகர், அக்டோபர் 24ஆம் தேதி தீர்ப்பை அறிவித்தார்.

மஞ்சு தேவி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்புகளைக் குறிப்பிட்ட நீதிபதி, பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்” என்றார்.
மேலும், “இது போன்ற வழக்கில் கருணை காட்டுவது நீதியை கேலி செய்யும் செயலாகும்.

காயமடைந்த ஆண்களும் பெண்களும் பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களின் நாகரீகத்தை மீறியதையும், குச்சிகள், கற்கள் மற்றும் செங்கற்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதையும் கருத்தில் கொண்டும் இவர்கள் அதிக தண்டனை பெற தகுதியானவர்கள்” என தனது 171 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ‘இந்தியா இந்து நாடு’; பா.ஜ.க எம்.எல்.ஏ பேச்சால் சலசலப்பு: வழக்குப்பதிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com