Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
Published on: October 26, 2024 at 10:21 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,295 ஆகவும், பவுன் ரூ. 58,360 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து கிராம் ரூ. 7,360 ஆகவும் பவுன் ரூ. 58,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,865 ஆகவும் பவுன் ரூ. 62,920ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க
வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய், வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் குழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடும் நபர்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் குற்றத்தில் ஈடுபட்ட உண்மை நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வருங்காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள விஜய், இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயலில் குடிக்கும் நீரில் சிலர் மனிதக் கழிவுகளை கலந்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
பெர்ஷனல் லோன் வட்டி விகிதம்: தனிநபர் கடன் வாங்க விரும்புபவர்கள் முதலில் வட்டி விகிதங்களை மற்ற வங்கிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது அவசியம். தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது. மேலும், கடனுக்கு விண்ணப்பிப்பவரின் கிரெடிட் ஸ்கோரை பொறுத்தும் வட்டி விகிதம் மாறுபடுகிறது.
இரண்டு வெவ்வேறு வங்கிகளில் வசூலிக்கப்படும் வட்டிகளின் பேஸ் பாய்ண்ட் 50 புள்ளிகள் மாறுபட்டு இருந்தாலும் அது நீண்ட காலத்திற்கு கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வெவ்வேறு வங்கிகளில் தனிநபர் கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஆண்டுக்கு 10.85 சதவீதம் முதல் 16.65 சதவீதம் வரை வசூலிக்கிறது. கடன் தொகையில் செயலாக்கக் கட்டணங்கள் 2 சதவீதம் வரை வசூலிக்கின்றன.
கோடக் மஹிந்திரா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி ஆண்டுக்கு 10.99 சதவீதம் முதல் 16.99 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. அதே நேரத்தில் செயலாக்கக் கட்டணங்கள் கடன் தொகையில் 5 சதவீதம் வரை இருக்கும்.
எச்டிஎஃப்சி வங்கி
மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனிநபர் கடன்களுக்கு 10.85 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI)
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பெருநிறுவன ஊழியர்களிடம் 12.60 முதல் 14.60 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 11.60 சதவீதம் முதல் 14.10 சதவீதம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.வெவ்வேறு வகை ஊழியர்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் உள்ளன.
ஆக்சிஸ் வங்கி
தனியார் வங்கியான ஆக்சிஸ் தனிநபர் கடன்களுக்கு 10.55 சதவீதம் முதல் 21.80 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி தனிநபர் கடன்களுக்கு 12.50 முதல் 14.50 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.
வங்கி | வட்டி விகிதங்கள் (%) |
---|---|
ஐசிஐசிஐ வங்கி | ஆண்டுக்கு 10.85% முதல் 16.65% வரை |
கோடக் மஹிந்திரா வங்கி | ஆண்டுக்கு 10.99% முதல் 16.99% வரை |
எச்டிஎஃப்சி வங்கி | 10.85 முதல் 24% |
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா | 12.60 முதல் 14.60% (கார்ப்பரேட் ஊழியர்களுக்கு) |
ஆக்ஸிஸ் வங்கி | 10.55 முதல் 21.80% வரை |
பஞ்சாப் நேஷனல் வங்கி | 12.50 முதல் 14.50% வரை |
செயலாக்கக் கட்டணங்கள் (Processing charges)
வட்டி விகிதங்களைத் தவிர, கடன் வாங்குபவர்கள் செயலாக்கக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடன் வழங்கப்படும் தொகையில் 0.5 – 2.5 சதவீதம் வரை இருக்கும். இந்தக் கட்டணம் பொதுவாக கடன் வழங்கும் நேரத்தில் கழிக்கப்படும்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
டாப் 5 எம்.பி.ஏ கல்லூரிகள்: இந்தியாவின் நிதி மையமான மும்பையில் பல உலத்தரம் வாய்ந்த எம்பிஏ கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஐஐஎம் மும்பை மற்றும் எஸ்.பி. ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என பல சிறந்த கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிறந்த 5 கல்வி நிறுவனங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
IIM மும்பை (NITIE)
காராஷ்டிராவின் மும்பையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம் மும்பை 1963 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்நிறுவனம்என்.ஐ.ஆர்.எஃப் 2024 ‘மேனேஜ்மென்ட்’ பிரிவில் 6வது இடத்தை பிடித்தது. டைம்ஸ் உயர் கல்வியின் ‘இம்பேக்ட்்’ பிரிவில் 401-600 க்கு இடையிலான இடத்தைப் பிடித்துள்ளது.
சேர்க்கை செயல்முறை:
படிப்புகள்
ஐஐஎம் மும்பை பல்வேறு வணிக மற்றும் மேலாண்மைத் துறைகளில் ஏழு படிப்புகளை வழங்குகிறது. முதன்மையாக இரண்டு ஆண்டு தொழில்துறை பொறியியல் முதுகலை டிப்ளமோ (PGDIE) மற்றும் தொழில்துறை மேலாண்மை முதுகலை டிப்ளமோ (PGDIM) ஆகியவை ஆகும்.
கூடுதலாக, முதுகலை அளவில் வணிகம் மற்றும் மேலாண்மையில் சான்றிதழ் மற்றும் உலகளாவிய சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.
கட்டணம்
MBA/PGDM (3 படிப்புகள்) – ரூ. 14 லட்சம்
PG டிப்ளமோ (1 படிப்பு) – ரூ. 15 லட்சம்
நிர்வாக MBA/PGDM (1 படிப்பு) – ரூ. 15 லட்சம் வரை செலவாகும்.
எஸ். பி. ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SPJIMR)
SP ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SPJIMR) NIRF 2024 தரவரிசையில், SPJIMR ‘மேலாண்மை’ பிரிவில் 20வது இடத்தைப் பிடித்தது. இந்நிறுவனம் இந்தியாவின் சிறந்த 50 மேலாண்மை பள்ளிகளில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளது.
சேர்க்கை செயல்முறை
சேர்க்கைக்குத் தகுதி பெற, விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அவர்கள் GMAT, CAT, MAT மற்றும் பிற போன்ற பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
படிப்புகள்
இந்த நிறுவனம் ஆன்லைன் PGDM, PGPM, PGPGM மற்றும் பிற தொடர்புடைய பல படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
கட்டணம்
இந்தக் கல்லூரிக்கான கல்விக் கட்டணம் ரூ.24 லட்சம், சராசரி ஆண்டு தொகுப்பு ரூ.32 லட்சம்.
SVKM இன் நர்சி மோஞ்சி மேலாண்மை ஆய்வு நிறுவனம் (NMIMS)
NMIMS நிறுவனம் NIRF தரவரிசையில் 21வது இடத்தைப் பிடித்துள்ளது.
சேர்க்கை செயல்முறை
படிப்புகள்
NMIMS வணிக மேலாண்மை பள்ளி முழுநேர மற்றும் பகுதிநேர MBA திட்டங்கள், PGDM, நிர்வாக MBA மற்றும் மேலாண்மையில் PhD, பல்வேறு சிறப்பு சான்றிதழ் மற்றும் நிர்வாக திட்டங்களை வழங்குகிறது.
கட்டணம்
கே ஜே சோமையா மேலாண்மை நிறுவனம்
கே ஜே சோமையா மேலாண்மை நிறுவனம், 2024 ஆம் ஆண்டிற்கான NIRF தரவரிசைப்படி ‘மேலாண்மை’ பிரிவில் 63வது இடத்தைப் பிடித்துள்ளது.
சேர்க்கை செயல்முறை
சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளில் XAT, CAT, MAT மற்றும் பிற தேர்வுகளும் அடங்கும். தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
படிப்புகள்
சுகாதார மேலாண்மையில் MBA, விளையாட்டு மேலாண்மையில் MBA மற்றும் பல படிப்புகள் வழங்கப்படுகிறது.
கட்டணங்கள்
கல்விக் கட்டணம் சுமார் ரூ. 17 லட்சம் ஆகும்.
முதல்வர் எல் என் வெலிங்கர் மேலாண்மை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
வெலிங்கர் மும்பை பல்வேறு பிரிவுகளில் பல தரவரிசை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட நன்கு மதிக்கப்படும் நிறுவனமாகும். NIRF 2024 தரவரிசையில், இந்நிறுவனம் ‘மேலாண்மை’ பிரிவில் 84வது இடத்தைப் பிடித்தது.
சேர்க்கை செயல்முறை
படிப்புகள்
நிதி மேலாண்மையில் PGDM, மனிதவள மேலாண்மையில் PGDM, சுகாதார மேலாண்மையில் PGDM மற்றும் பல படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
கட்டணம்
கல்விக் கட்டணம் சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.
இதையும் படிங்க ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு; இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ருசியான மோமோஸ் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
மைதா மாவு-1½ கப்
உப்பு-1 டீஸ்பூன்
எண்ணெய்-1 டீஸ்பூன்
ஸ்டப்பிங் தயாரிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-2
வெங்காயம் -1
மிளகு தூள் -1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
முட்டைகோஸ் -1கப்
துருவிய கேரட்-1கப்
சோயா சாஸ் -1 டீ ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை-½ கப்
மோமோஸ் சட்னி தயாரிக்க
தக்காளி -5
காஷ்மீரி மிளகாய் -10
எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி -3 டீஸ்பூன்
பூண்டு -¼கப்
உப்பு -1 டீஸ்பூன்
சர்க்கரை-1 டீஸ்பூன்
சோயா சாஸ் -1 டேபிள் ஸ்பூன்
வினிகர்-1 டேபிள் ஸ்பூன்
டோமட்டோ கெட்சப் -3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் ரீபண்ட் ஆயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். மாவு காயாமல் இருப்பதற்காக மாவு மீது சிறிது எண்ணெய் சேர்த்து தடவி இரண்டு மணி நேரம் ஊரை விட வேண்டும்.
பின்னர் ஸ்டஃபிங் தயாரிக்க ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், துருவிய கேரட் மற்றும் சோயா சாஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு பின்னர் அடுப்பை ஆஃப் செய்து இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.இப்போது ஸ்டஃபிங் தயாராகி விட்டது.
ஏற்கனவே தயார் செய்து வைத்த மைதா மாவினை பூரி போன்று சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை பூரி கட்டையில் வைத்து பூரி தயார் செய்ய உருட்டுவது போல உருட்டி எடுக்க வேண்டும். இதன் மத்தியில் தயார் செய்து வைத்த ஸ்டஃபிங்கை வைத்து மாவின் விழும்பினை ஒன்றன்பின் ஒன்றாக சேலைக்கு மடிப்பு எடுப்பது போன்று மடித்து இறுதியில் அழுத்தம் கொடுத்து ஸ்டஃபிங் வெளியே வராதபடிக்கு மாவை வைத்து மூடிவிட வேண்டும்.
இதேபோன்று அனைத்து மோமோசையும் தயார் செய்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து மோமோசை வைத்து அவித்து எடுக்க வேண்டும். அடுப்பு தீயை மீடியம் ஃபிளேமில் வைத்து 25 நிமிடம் வேக விட வேண்டும். இப்போது டேஸ்டியான வெஜ் மோமோஸ் தயார்.
மோமோஸ் சட்னி செய்ய ஒரு பாத்திரத்தில் தக்காளி, காஷ்மீரி மிளகாய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இந்த கலவை நன்கு ஆரிய பின் தண்ணீரோடு சேர்த்து மை போன்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து இதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதனுடன் சோயா சாஸ், வினிகர் மற்றும் டோமட்டோ கெட்சப் சேர்த்து ஐந்து நிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான மோமோஸ் சட்னி தயார். இந்த சட்னியை மோமோசுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : கோதுமை மாவு இருக்கா? நார்த் இந்தியன் ஸ்பெஷல் மால்புவா தயார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com