Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

Published on: October 26, 2024 at 10:21 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,295 ஆகவும், பவுன் ரூ. 58,360 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து கிராம் ரூ. 7,360 ஆகவும் பவுன் ரூ. 58,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,865 ஆகவும் பவுன் ரூ. 62,920ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க
இன்றைய ராசிபலன்கள் (14-12-2025): எந்த ராசிக்கு நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். 12 ராசிகளின் (14-12-2025) பலன்கள் என்ன? இதில் வேலை, ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை தொடர்பான பல்வேறு கணிப்புகள் உள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சரியான நேரத்தில் பொருத்தமாகப் பேசுவதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறுவார்கள். இவர்கள் குடும்ப விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கத்தை வலுப்படுத்துவார்கள். நிர்வாகத்தை மேம்படுத்த முயற்சிப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் காதலில் வெற்றி பெறுவார்கள். காதல் விஷயங்கள் மேம்படும். தோழமைகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுடன் உல்லாசப் பயணங்கள் மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் தீர்க்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் உறவுகளால் பயனடைவார்கள். வணிக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் தொடர்பு வட்டம் விரிவடையும். சமூகத் தொடர்புகளில் அவர்கள் வசதியாக இருப்பார்கள். விரும்பிய சாதனைகள் சாத்தியமாகும்.
கடகம்
நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். இவர்கள் செயல்பாடு மற்றும் தைரியத்துடன் முன்னேறுவார்கள். அறிவுசார் பணிகள் வேகமடையும். கலைத் திறன்கள் செம்மைப்படுத்தப்படும். அனைத்துத் துறைகளிலும் அவர்கள் விரும்பிய நிலையைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.
சிம்மம்
உறவுகள் வலுப்படுத்தப்படும். தைரியமும் வீரமும் நிலைத்திருக்கும். அவர்கள் வசதிகள் மற்றும் ஆடம்பரங்களில் கவனம் செலுத்துவார்கள். நற்பெயரும் செல்வாக்கும் அதிகரிக்கும். சோம்பலைத் தவிர்க்கவும். சூழல் சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நண்பர்களுடன் எளிதான விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். தொழில்முறை முயற்சிகள் பலனளிக்கும். தனிப்பட்ட செயல்திறன் மேம்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இவர்கள் முக்கியமான பணிகளைத் தயாரிப்பு மற்றும் தைரியத்துடன் முன்னெடுப்பார்கள். சமூகத் தொடர்புகளில் அவர்கள் வசதியாக இருப்பார்கள். சகோதரத்துவம் மேம்படுத்தப்படும்.
விருச்சிகம்
பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருங்கள். முதலீடுகள் கட்டுப்படுத்தப்படும். தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்கவும். மன்னிக்கும் மனப்பான்மையைப் பேணுங்கள். தடைகள் பொறுமையுடன் கடக்கப்படும். செயல்பாடு மற்றும் சமநிலையுடன் முன்னேற்றம் காணப்படும்.
தனுசு
நடத்தையில் சமநிலையைப் பேணுங்கள். அவர்கள் பெரியவர்களின் துணையைப் பெறுவார்கள். அன்புக்குரியவர்களுடன் நெருக்கத்தை அதிகரிப்பார்கள். தனிப்பட்ட விஷயங்களில் பொறுமையைக் காட்டுங்கள். பணிவுடனும் ஞானத்துடனும் செயல்படுங்கள். வதந்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்.
மகரம்
இவர்கள், தங்கள் வரவு செலவுத் திட்டத்தைக் கடைப்பிடிப்பார்கள். சாதனைகள் சராசரியாக இருக்கும். அவர்கள் பொறுப்புடன் பணியாற்றுவார்கள். கடின உழைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செயல்திறன் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
கும்பம்
உறவினர்களுடன் நல்லிணக்கம் பேணப்படும். கோபத்தில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பேச்சும் நடத்தையும் பயனுள்ளதாக இருக்கும். சித்தாந்த வேறுபாடுகளை ஊக்குவிப்பதைத் தவிர்க்கவும்.
மீனம்
சமூக சேவை மற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். அவர்கள் தங்கள் தொழிலில் பொறுப்புணர்வைக் கடைப்பிடிப்பார்கள். தொழில்முறை விஷயங்களில் சிறந்த செயல்திறன் காணப்படும்.
இதையும் படிங்க : மாதம் ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி, ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு.. எதில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
புதுடெல்லி, டிச.13, 2025: வீர சாவர்கர் இன்டர்நேஷனல் இம்பாக்ட் அவார்ட்ஸ் 2025 நிகழ்ச்சி நியூடெல்லியில் உள்ள என்.டி.எம்.சி மாநாட்டு ஹாலில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் உரையாற்றிய மனோஜ் சின்ஹா, “வீர சாவர்கர் இன்டர்நேஷனல் இம்பாக்ட் அவார்ட்ஸ் பெற்ற அனைவருக்கும் நான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். வீர சாவர்கர் அவர்கள் தேசத்திற்கான அர்ப்பணிப்பால் எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் புரட்சியாளர் ஆவார்.
சமூகத்தை வலுப்படுத்தும் பணியில், ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா (HRDS INDIA) உடன் எங்கள் முயற்சியின் முதல் கட்டமாக ஜம்மு & காஷ்மீரில் 1,500 புதிய நவீன வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த முயற்சி எண்ணற்ற வாழ்க்கைகளை மேம்படுத்தி, குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும். இதன் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சுயநம்பிக்கை, நேர்மை மற்றும் நீதி ஆகியவற்றுடன் முன்னேற முடியும்” என்றார்.
விழாவில் வரவேற்பு உரை நிகழ்த்திய சுவாமி ஆத்ம நம்பி ஜி, “ஜம்மு & காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா வீர சாவர்கர் இன்டர்நேஷனல் இம்பாக்ட் அவார்ட்ஸ் விழாவில் கலந்து கொண்டது எங்களுக்கு பெருமை. அவரது வருகை இந்த மேடையின் தேசிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மேலும், சமூக முன்னேற்றம், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துதல் மற்றும் அர்த்தமுள்ள தேச கட்டுமான முயற்சிகளை முன்னெடுக்கும் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியாவின் பார்வையை வலுப்படுத்துகிறது” என்றார்.
இந்த விழாவில் வீர சாவர்கர் அவர்களுக்கு ஒலி-ஒளி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. மேலும், பத்மஸ்ரீ வி. ஜெயராம ராவ் அவர்களின் சீடரான வைஷ்ணவி பி.ஜே அவர்கள் பாரம்பரிய ந்ரித்யம் நடன நிகழ்ச்சியும் நடந்தது. இந்த விழாவில் தேசிய தலைவர்கள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளின் சாதனையாளர்கள் கலந்து கொண்டு, சுதந்திரவீரர் வினாயக் தாமோதர் சாவர்கர் அவர்கள் வலியுறுத்திய தைரியம், சீர்திருத்தம் மற்றும் தேச கட்டுமான பண்புகளை பிரதிபலிக்கும் நபர்களை கௌரவித்தனர்.
முக்கிய விருந்தினர்களில் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா (HRDS INDIA) தலைவர் சுவாமி ஆத்ம நம்பி ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா தலைவர் டாக்டர் எஸ். கிருஷ்ணகுமார், ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா துணைத் தலைவர் கே. ஜி. வேணுகோபால் மற்றும் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா நிறுவனர் செயலாளர் அஜி கிருஷ்ணன் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா.. பா.ம.க, தே.மு.தி.க நிலைப்பாடு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
புதுடெல்லி, டிச.13, 2025: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டிசம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழ்நாடு வரும் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளார். மேலும், கூட்டணிக்குள் புதிய கட்சிகளை சேர்க்கும் பணிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகள் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா பிரதான கட்சியாக உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை இன்னமும் முழுமையாக அறிவிக்கவில்லை. நாம் தமிழர் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தற்போதுவரை எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. இதனால் இம்முறை தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மலைசரிவு பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 9 பேர் துடிதுடித்து மரணம்.. 22 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
புதுடெல்லி, டிச.13, 2025: பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்கூர், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள முருகர் கோவிலில் கார்த்திகை தீபம் விளக்கேற்ற அனுமதிக்காத தமிழக அரசை விமர்சித்தார். இது, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அவமதிப்பாகும் என்றார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில், பூஜ்ய நேரத்தின் போது, இந்த விவகாரத்தை எழுப்பிய தாக்கூர், மாநில அரசு நீதிமன்ற உத்தரவை திட்டமிட்டு புறக்கணித்ததோடு, விளக்கேற்றிய பக்தர்கள் மீது லாத்திசார்ஜ் தடியடி நடத்தப்பட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை திட்டமிட்டு மீறியது என்றும் அவர் கூறினார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் கூச்சலிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகர் கோவிலில் கார்த்திகை தீப விளக்கேற்றும் விவகாரம், டிசம்பர் 3ஆம் தேதி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதி சுவாமிநாதன், முருகர் கோவில் அருகில்உள்ள தர்கா அருகே உள்ள தீபத்தூணில் இந்த சடங்கை அனுமதித்து தீர்ப்பளித்தார். இந்த நிலையில், நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : மலைசரிவு பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 9 பேர் துடிதுடித்து மரணம்.. 22 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
அமராவதி, டிச.12, 2025: ஆந்திரா மாநிலத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று அதிகாலை (டிச.12, 205) பெரிய விபத்து ஏற்பட்டது. அதாவது, தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சிந்தூர்–மரேடுமில்லி மலைச்சரிவு சாலையில் பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நேரத்தில் பேருந்தில் மொத்தம் 35 பயணிகள் மற்றும் 2 டிரைவர்கள் இருந்தனர்.
பேருந்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையிலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்தது. இந்த சம்பவம், சிந்தூர்–மரேடுமில்லி மலைச்சரிவு சாலையில் துலசிபாகா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது நடந்தது. உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிந்தூர் பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் தீவிரமாக காயமடைந்த 5 பயணிகள் பத்ராசலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவு பேர் சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரிகர்கள் ஆவர். இந்த விபத்து குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அமித் பார்டர் கூறுகையில், “விபத்து அதிகாலை சுமார் 4:30 மணியளவில் ஏற்பட்டது” என்றார்.
இதையும் படிங்க : மணிப்பூரில் ஜனாதிபதி திரௌபதி முர்மு.. புதிய திட்டங்கள் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com