Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

Published on: October 26, 2024 at 10:21 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,295 ஆகவும், பவுன் ரூ. 58,360 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து கிராம் ரூ. 7,360 ஆகவும் பவுன் ரூ. 58,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,865 ஆகவும் பவுன் ரூ. 62,920ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க
சென்னை, ஏப்.26, 2026: இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, டாஸ் இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்நிலையில், தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் (11), உர்வில் படேல் (4), சர்ஃபராஸ் கான் (0) விரைவில் ஆட்டமிழந்தனர்.
மேலும், பிரெவிஸ் (2), ஷிவம் துபே (22), கார்த்திக் ஷர்மா (15), ஓவர்டன் (18) குறைந்த ரன்களில் அவுட்டானனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் நிலைத்து 60 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார்.
இதனால், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள், அர்ஷாத் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸ்
159 ரன்களை இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் ஆடியது. தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் அதிரடி காட்டினர். கில் 23 பந்துகளில் 33 ரன்கள் அடித்து நூர் அகமது பந்தில் அவுட்டானார்.
இந்த நிலையில், சாய் சுதர்சன் 46 பந்துகளில் 87 ரன்கள் (7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) அடித்து ஹுசைன் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து, ஜோஸ் பட்லர் 39* ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்த நிலையில், 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் ந்த வெற்றியால் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் முன்னேறியது; சென்னை அணி தடுமாறி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராஜஸ்தான் vs ஹைதராபாத்.. வைபவ் சூர்யவன்சி அதிரடி சதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
மும்பை, ஏப்.26, 2026: நடிகர் அக்ஷய் குமாரின் மகளுக்கு ஆன்லைனில் ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். யார் அவர்?
அக்ஷய் குமார் மகளுக்கு ஆபாச மெசேஜ்
2025 அக்டோபர் மாதம், நடிகர் அக்சய் குமார் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது மகள் நிதாராவுக்கு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
அதாவது, அக்ஷய் குமார் மகள் நிதாரா ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் பாலியல் ரீதியான புகைப்படங்களை கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
உடனடியாக நிதாரா தனது தாய் ட்விங்கிள் கன்னாவிடம் தெரிவித்தார். இதையடுத்து அக்சய் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், மகாராஷ்டிரா சைபர் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யார் அவர்?
எனினும், அந்த நபர் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை; அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : நிர்வாண வீடியோகால்.. ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டல்.. யார் அந்த இன்ஸ்டாகிராம் அழகி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஏப்.26, 2026: தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்தபோதும், பணியில் இருக்க வேண்டிய தலைவர்கள் ஓய்வில் சென்றிருப்பதை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில் ஓய்வில் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி அயல் நாட்டுப் பயணத்தில் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கோடையில் வீட்டில் தன் பணியில்..
ஆனால் பணியில் இருக்க வேண்டிய முதலமைச்சர் வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில்!!!… வாக்களிக்க துணை நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணியில் ஆனால் துணை முதலமைச்சர் அயல் நாட்டு பயணத்தில்….
அரசியல் என்பது அனைவருக்கும் சமமே… திமுகவின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை… அவர்களின் ஏற்றத்திற்காக அல்ல இற க்கத்திற்காகவே…
ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள். ஆனால் இதே கூட்டம் தான் அன்று அரசு வேலையாக ஊட்டி சென்ற பெருந்தலைவர் காமராஜரை கும்பி எரியுது குடல் வேகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா என்று கேலி பேசியவர்கள்..
புரிந்து கொள்ளுங்கள் இவர்களை.. பொதுநலம் என்று பேசிக்கொண்டு தெரியும் இந்த சுயநலவாதிகளை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய கும்பல்.. மே 4ல் விடுதலை.. த.வெ.க நிர்மல் குமார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
நாகர்கோவில், ஏப்.26, 2026; நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பாக மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, கடந்த சில நாள்களாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம், அவர்களது கணக்கில் முறையாக வரவு வைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனால் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது, புகாரின் அடிப்படையில், தபால் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் முகாமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட அனைத்து ரசீதுகள் கணினிப் பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், சந்தேகத்திற்குரிய பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்களிடம் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பல லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முழுமையான தணிக்கைக்குப் பின்னரே சரியான தொகை எவ்வளவு என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் பணம் தொடர்பான பதற்றத்தையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5 முதல் 6 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு.. உயிர் தப்பிய டொனால்ட் ட்ரம்ப்.. வெள்ளை மாளிகையில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
கோவை, ஏப்.26, 2026: கோவையை சேர்ந்த 19 வயதான மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் வீடியோகாலில் பேசியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாணவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மேலும், அந்த மாணவரின் நிர்வாண படங்களும் வெளியாகியுள்ளன.
இதனால் அதிர்ச்சியுற்ற அந்த மாணவர் செய்வதறியாமல் தவித்துள்ளார். இதற்கிடையில் ரூ.20 ஆயிரம் பணம் கேட்டு எதிர்முனையில் இளைஞர் ஒருவர் பேசியுள்ளார்.
இந்த மிரட்டலுக்கு அடிபணிந்த மாணவர் ரூ.20 ஆயிரம் பணத்தை அனுப்பிவைத்துள்ளனர். இதற்கிடையில் மீண்டும் மீண்டும் அந்த இளைஞர், மாணவரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் தனது நண்பர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன், இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் அழகி மற்றும் இளைஞர் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com