மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.. செந்தில் பாலாஜி

DVAC Probes Senthil Balaji : மடியில் கடனில்லை, வழியில் பயமில்லை என தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Published on: July 29, 2026 at 7:57 pm

கரூர், ஜூலை 29, 2026: முன்னாள் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சென்னை, கரூர், ஈரோடு உள்ளிட்ட 41 இடங்களில் சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜி தங்கியிருந்த ஆழ்வார்பேட்டை ஹோட்டல் அறையிலும் அதிகாரிகள் காலை 9 மணியளவில் சோதனை செய்தனர்.

சுமார் 3½ மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், டாஸ்மாக் டெண்டர்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர். விசாரணை முடிவில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று எழுத்துப்பூர்வமாக நகல் வழங்கியதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதற்கிடையில், தவெக எம்எல்ஏ பேரம் வழக்கில் அவர் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இன்று (ஜூலை 29, 2026) காலை விசாரணை காரணமாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரத்தில் ஆஜராக முடியாமல், மதியம் சென்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு சம்பந்தமில்லாத புகாரில் பெயரை இணைத்துள்ளனர். எந்த சோதனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்வேன். இன்று சோதனையில் எந்த ஆவணங்களும் எடுத்துச் செல்லவில்லை” என்றார்.

மேலும், “டாஸ்மாக் வழக்கு ஏற்கனவே அமலாக்கத்துறையில் நிலுவையில் உள்ளது. அதே வழக்கில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர்களிடம் கூட சோதனை நடக்கிறது. எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : தமிழக ஆழ்கடல் மீன்கள் வெளிநாடு ஏற்றுமதி.. நுழைவு சீட்டு எப்போது? மீனவர்கள் எதிர்ப்பார்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com