Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.

Published on: November 8, 2024 at 10:22 am
Gold Rate today in Chennai | சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை ரூ. 60 ஆயிரத்தை நெருங்கியது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்நது சரிவை சந்தித்து. இது சற்று ஆறுதலை தரும் வகையில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,200 க்கும், பவுன் ரூ. 57,600 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து கிராம் ரூ. 7,285 ஆகவும் பவுன் ரூ. 58,280 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,790 ஆகவும் பவுன் ரூ. 62,320ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் ரூ.102-க்கும் கிலோ வெள்ளி ரூ.102,000-க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து கிராம் ரூ.103 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க

மும்பை, பிப்.1, 2026: பார்டர் 2 திரைப்படத்தின் 9ஆம் நாள் பாக்ஸ்ஆபிஸ் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
போர்க்களம் சார்ந்த திரைப்படமான பார்டர் 2 இரண்டாவது வார இறுதியில் பாக்ஸ் ஆபீஸில் வசூலில் உயர்வை கண்டுள்ளது. சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித் தோசாஞ் மற்றும் ஆஹன் ஷெட்டி நடித்துள்ள இந்த படம், சனிக்கிழமை உள்நாட்டு வசூலில் வலுவான உயர்வை பதிவு செய்ததன் பின்னணியில், உலகளவில் ₹350 கோடி வசூலை எட்டியுள்ளது.
முதல் வாரம், படம் ₹224.25 கோடி நிகர வசூலை பெற்றது. குடியரசு தினத்தில் மட்டும் ₹59 கோடி வசூலித்தது. இரண்டாவது வாரம், குறைந்த வசூலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை ₹10.75 கோடி வசூலித்தது.
இந்நிலையில், சனிக்கிழமை 65% உயர்வுடன் ₹17.75 கோடி நிகர வசூலித்தது. இதனால் உள்நாட்டு வசூல் ₹252.25 கோடி நிகரமாக (₹303 கோடி மொத்தமாக) உயர்ந்தது. மேலும், வெளிநாட்டு வசூல்:, ஒன்பது நாட்களில் $5 மில்லியன் (சுமார் ₹47 கோடி) என வசூலித்துள்ளது.
இதனால், பார்டர் 2 உலகளாவிய வசூல் ₹350 கோடியாக உயர்ந்துள்ளது.
பார்டர் 3 எப்போது?
பூஷண் குமார், கிரிஷண் குமார், ஜே.பி. துத்தா மற்றும் நிதி துத்தா தயாரித்த பார்டர் 2 திரைப்படத்தில் மோனா சிங், சோனம் பாஜ்வா, மேதா ராணா மற்றும் ஆன்யா சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பேட்டி ஒன்றில், பார்டர் 3 எதிர்காலத்தில் உருவாகும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மூன்றாவது பாகம் குறித்து இதுவரை வேறு எந்த விவரங்களும் பகிரப்படவில்லை.
இதையும் படிங்க: நடிகை கேத்ரின் ஓ’ஹாரா மரணம்.. உலகம் முழுக்க ரசிகர்கள் இரங்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

மும்பை, பிப்.1, 2026: ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலை 12.43 மணியளவில் பாலிவுட் திரைப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் மும்பை இல்லம் அருகே நான்கு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் ஜூஹுவில் உள்ள ஷெட்டியின் இல்லம் அருகே நடந்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை போலீசார் கூடுதல் காவலர்களை அங்கு பாதுகாப்பு பணிக்காக நியமித்துள்ளனர்.
தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் நோக்கம் இன்னும் தெரியவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசும், தடய அறிவியல் குழுவும் சம்பவ இடத்தில் இருந்து தாக்குதலாளர்களை கண்டறிய ஆய்வுகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், திரைப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் இல்லம் வெளியே போலீஸ் வாகனங்கள், தடுப்புகள் மற்றும் அதிகாரிகள் நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
எனினும், ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை நோக்கத்திற்காக நடத்தப்பட்டதா அல்லது வேறு காரணத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகை கேத்ரின் ஓ’ஹாரா மரணம்.. உலகம் முழுக்க ரசிகர்கள் இரங்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, ஜன.31, 2026: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் மருத்துவர் ராமதாஸ் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கடந்த 29-ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூரு நாகர்பாவி பகுதிக்கு மகிழுந்தில் சென்றார்.
அப்போது கர்நாடக ரக்ஷண வேதிகா அமைப்பைச் சேர்ந்த டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழி மறித்து மிரட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தி, கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
காரில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது அநாகரிகத்தின் உச்சமாகும்.
எனவே தனிமனித உரிமையைப் பறிக்கும் வகையிலும், இரு மாநில மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவருடன் இருந்த 4 நபர்கள் மீது கர்நாடக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
‘மேலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் வருங்காலத்தில் இது போன்ற அநாகரிகச் செயல்கள் குறைய வழிவகுக்கும் என இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக, கர்நாடக அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்” எனவும் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 65 லட்சம் கம்மவர்கள்.. பிப்.8 ஸ்ரீபெரும்புதூரில் மாநாடு!
Border 2 worldwide box office collection Report: சன்னி தியோல், வருண் நடிப்பில் பார்டர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது....
Rohit Shettys Mumbai Home: பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்....
Tamil Nadu person was attacked in Bengaluru: பெங்களூருவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தனது கண்டனத்தை மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்....
Pramit Jhaveri to Tata Trusts: பிரமித் ஜாவேரி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸிலிருந்து விலகுகிறார். அவர் 2020 பிப்ரவரி 12 முதல் சர்...
Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல்....
Thailand Masters quarterfinals: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் இஷராணி பாருவா, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்....
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, பிப்.1, 2026: பிரமித் ஜாவேரி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் 2020 பிப்ரவரி 12 முதல் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் (SDTT) நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், 2026 பிப்ரவரி 11 அன்று அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்பின் மறுபடியும் நியமிக்கப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நோயல் டாடாவுடன் சில நாட்களுக்கு முன் இதை விவாதித்ததாகக் கூறியுள்ளார். இது தனிப்பட்ட விருப்பம் எனத் தெரிவித்துள்ள ஜாவேரி, “டாடா டிரஸ்ட்ஸில் நிர்வாகியாக பணியாற்றியது பெருமை. எதிர்காலத்தில் டிரஸ்ட்ஸுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரமித் ஜாவேரி, சிட்டிபாங்க் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார்.
இவர் ஜனவரி 31 அன்று எழுதியுள்ள கடிதத்தில், சில நாள்களுக்கு முன் நோயல் டாடாவுடன் இந்த விஷயத்தை விவாதித்ததாகவும், தற்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, ஜன.31, 2026: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் டி.டி.வி தினகரன் சனிக்கிழமை (ஜன.31, 2026) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா?” என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கையில் மேலும் டி.டி.வி தினகரன், “தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.
எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸ் கொடூரக் கொலை!
Tamil Nadu person was attacked in Bengaluru: பெங்களூருவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தனது கண்டனத்தை மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்....
Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல்....
TN Journalists Kidnapping Case: “கனிமக்கொள்ளையை படம் பிடித்த செய்தியாளர் கடத்தல் விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி...
Conference of Kammavars in Tamil Nadu: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கம்மா சர்வதேச கூட்டமைப்பு (கே.ஜி.எஃப்) மாநாடு 2026, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது....
M K Stalin pays tribute to Mahatma Gandhi: மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவை போற்றுவோம் என தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
Congress: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பதில் உறுதியாக உள்ள திமுக, அக்கட்சியுடன் கூட்டணியை இறுதிப் படுத்தி உள்ளதாக தகவல்கள்...
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com