Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.

Published on: November 8, 2024 at 10:22 am
Gold Rate today in Chennai | சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை ரூ. 60 ஆயிரத்தை நெருங்கியது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்நது சரிவை சந்தித்து. இது சற்று ஆறுதலை தரும் வகையில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,200 க்கும், பவுன் ரூ. 57,600 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து கிராம் ரூ. 7,285 ஆகவும் பவுன் ரூ. 58,280 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,790 ஆகவும் பவுன் ரூ. 62,320ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் ரூ.102-க்கும் கிலோ வெள்ளி ரூ.102,000-க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து கிராம் ரூ.103 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க

புதுடெல்லி, மார்ச் 21 2026: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய பொருளாதாரத்தைப் பற்றிய பல கவலைகளை தனது சமீபத்திய ட்விட்டர் எக்ஸ் பதிவில் முன்வைத்தார். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் பலவீனமடைந்து 100-க்கு நெருங்குவது, தொழில்துறை எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வது ஆகியவை வெறும் எண்கள் அல்ல; வரவிருக்கும் பணவீக்கத்தின் தெளிவான அறிகுறிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
रुपये का डॉलर के मुकाबले कमजोर होकर 100 की तरफ बढ़ना और इंडस्ट्रियल फ्यूल की कीमतों में तेज़ बढ़ोतरी – ये सिर्फ आंकड़े नहीं, आने वाली महंगाई के साफ संकेत हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) March 21, 2026
सरकार चाहे इसे “नॉर्मल” बताए, लेकिन हकीकत ये है:
• उत्पादन और ट्रांसपोर्ट महंगे होंगे
• MSMEs को सबसे ज्यादा चोट…
அரசு இதை ‘இயல்பு’ என்று கூறினாலும், உண்மையில் நிலைமை வேறுபட்டதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ‘மோடி அரசு எந்தத் திசையும், எந்தத் திட்டமும் இல்லாமல் வெறும் வெற்று பேச்சுக்களையே கொண்டுள்ளது. அரசு என்ன சொல்கிறது என்பதே கேள்வி அல்ல; உங்கள் தட்டில் எது மீதமிருக்கிறது என்பதே கேள்வி,’ என்று அவர் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க; பாலக்காட்டில் மார்க்சிஸ்ட், பாஜக ரகசிய கூட்டணி.. காங்கிரஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

திருவனந்தபுரம் மார்ச் 21, 2026; கேரள மாநிலம் பாலக்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாரதிய ஜனதாவும் ரகசிய கூட்டணியில் உள்ளன என காங்கிரஸ் கட்சியின் கே.சி வேணுகோபால் குற்றம் சாட்டினார்.
மேலும், காங்கிரஸின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், இப்படியான மறைமுக ஒப்பந்தங்கள் ஒரு தொகுதியில் மட்டுமல்ல; மேலும் ஒரு அல்லது இரண்டு இடங்களிலும் இதுபோன்ற புரிதல்கள் உள்ளன” எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக, நெடும்பசேரி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி வேணுகோபால், “பாலக்காட்டில் நடப்பது, சிபிஎம்–பாஜக திட்டத்தை பிரதிபலிக்கிறது. இது வரும் நாட்களில் மேலும் தெளிவாகும். இப்படியான மறைமுக ஒப்பந்தங்கள் ஒரு தொகுதியில் மட்டுமல்ல; மேலும் ஒரு அல்லது இரண்டு இடங்களிலும் இதுபோன்ற புரிதல்கள் உள்ளன” என்றார்.
பாலக்காட்டில் போட்டி
பாலக்காட்டில் காங்கிரஸ் தரப்பில் நகைச்சுவை நடிகர் ரமேஷ் பிஷாரோடி போட்டியிடுகிறார். பாஜக தரப்பில் மூத்த தலைவரான ஷோபா சுரேந்திரன் நம்பிக்கையுடன் நிறுத்தப்பட்டுள்ளார். சிபிஎம் வேட்பாளர் ஹோட்டல் தொழிலதிபர் என். எம். ஆர். ரசாக் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சிக்கல்.. மார்ச் 23 வேட்பு மனு நிறைவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுச்சேரி மார்ச் 21, 2026; புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 23-ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில், பல வாரங்களாக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மார்ச் 4-ஆம் தேதி காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
கட்சித் தலைமை நேரடியாக தலையீடு செய்த பிறகே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, 234 சட்டமன்ற இடங்களில் காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிடும். காங்கிரஸ் தரப்பினர்கள், 39 இடங்களை கோரியிருந்தாலும், கூட்டணியை நிலைநிறுத்தும் நோக்கில் குறைவான இடங்களில் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க; எத்தனை கூட்டணி வந்தாலும் திமுக வெற்றி பெறும்.. தொல். திருமாவளவன்!
புதுச்சேரி நிலவரம்
இந்த நிலையில் புதுச்சேரி நிலவரம் குறித்து காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் பாரம்பரியமாக திமுக முன்னணி கூட்டாளியாக இருந்து வந்ததால், காங்கிரஸ் குறைவான இடங்களில் போட்டியிட ஒப்புக்கொண்டது. புதுச்சேரியில், காங்கிரஸ்தான் அதிக இடங்களைப் பெற்றுக் கொண்டிருந்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் 30 இடங்களில் காங்கிரஸ் 21 இடங்களில் போட்டியிட்டது; திமுக 9 இடங்களில் போட்டியிட்டது” என்றார்.
இதற்கிடையில் புதுச்சேரி மாநில முன்னாள் புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். “வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை நிறைவடைகிறது. ஆனால் கூட்டணி நீடிக்கும், இடவசதி பகிர்வு விரைவில் முடிவடையும் என நான் நினைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க; வீக் எண்டுல கிண்டி சிறுவர் பூங்கா போகும் பிளானா? இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, மார்ச் 21 2026: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உரையாடலில் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அவசியம் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தியதுடன், முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை கண்டித்தார். மேலும் சர்வதேச கடல் போக்குவரத்து வழிகள் பாதுகாப்பாகவும் திறந்தவையாகவும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spoke with President Dr. Masoud Pezeshkian and conveyed Eid and Nowruz greetings. We expressed hope that this festive season brings peace, stability and prosperity to West Asia.
— Narendra Modi (@narendramodi) March 21, 2026
Condemned attacks on critical infrastructure in the region, which threaten regional stability and…
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தவும், பதற்ற நிலையை சமாளிக்க தூதரக முறையிலான தீர்வு அவசியம் என்றும் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசி, ரமலாம் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். இந்தப் பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என நம்பிக்கை தெரிவித்தேன்
பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைப்பதாகவும் உள்ள, பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தேன். கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், கப்பல் வழித்தடங்கள் திறந்தும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தினேன்.
ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான ஈரானின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுகளைத் தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க; பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ? யார் இந்த சோஃபியா ஃபிர்தோஸ்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை மார்ச் 21 2026; இயக்குனர் சரணின் படங்களிலேயே மாறுபட்ட கதையம்சம் கொண்டது வட்டாரம்; இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருப்பார். கதாநாயகனுக்கு ஈடான ஒரு வில்லன் கதாபாத்திரம் நெப்போலியனுக்கு வழங்கப்பட்டிருக்கும். இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சரணிடம் அஜித் குமார், இது நான் நடிக்க வேண்டிய படம்; இதை நான் எப்படி மிஸ் செய்தேன் எனக் கூறியுள்ளார்.
இயக்குனர் சரண் டைரக்ஷனில் அமர்க்களம் காதல் மன்னன் உள்ளிட்ட படங்களில் அஜித் குமார் நடித்துள்ளார்; இயக்குனர் சரணை பொருத்தமட்டில் அவர் படங்களில் மிகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டது வட்டாரம் திரைப்படம். இந்த திரைப்படம் குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ” இந்த படத்தில் நெப்போலியன் கதாபாத்திரத்தில் ரகுவரனை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தேன்; ஆனால் அந்த நேரத்தில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு ஈடான ஒரு கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடிக்க வைத்தேன்” என்றார்.
மேலும் இந்த படம் அஜித் குமாருக்கு மிகவும் பிடித்த படம் எனக் கூறிய இயக்குனர் சரண், இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை நான் எப்படி மிஸ் செய்தேன்; இது நான் நடிக்க வேண்டிய படம் எனக் கூறினார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க; வசூலில் ட்ரிபிள் சென்சுரி அடித்த துரந்தர் 2.. எத்தனை கோடிகள் தெரியுமா? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com