புதுடெல்லி, ஜன.31, 2026: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கம்மா சர்வதேச கூட்டமைப்பு மாநாடு 2026, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு, புதுடெல்லி பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கம்மா சர்வதேச கூட்டமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஜெட்டி குசுமா குமார் மற்றும் அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
ஜெட்டி குசுமா குமார் பேட்டி
கம்மா சர்வதேச கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் உலகம் முழுவதும் உள்ள கம்மா சமூகத்தினரை ஒன்றிணைப்பதும், அவர்களின் பண்பாட்டு உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதும், அடையாளத்தை பாதுகாப்பதும், சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் மற்றும் வலிமையை வழங்குவதுமாகும்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தெளிவான நோக்கத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்தது. அதற்கு உலகளாவிய கம்மா சமூகத்திடமிருந்து கிடைத்த ஆதரவு மிகப் பெரிதாக இருந்தது. இன்று கம்மா சர்வதேச கூட்டமைப்பு, உலகம் முழுவதும் சுமார் 2.1 கோடி மக்களை கொண்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது; இது இந்திய மக்கள்தொகையின் சுமார் 1.5 சதவீதமாகும்.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜெட்டி குசுமா குமார், நாட்டில் வேகமாக நடைபெறும் சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட பங்கேற்பை மேலும் அவசியமாக்கியுள்ளதாக கூறினார்.
மேலும், “நாடு முழுவதும் பல சமூகங்கள் தங்களின் நலன்களை பாதுகாக்கவும், தொடர்ச்சியை உறுதி செய்யவும் பல்வேறு வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றன.
நமது சமூகத்தின் இருப்பை பாதுகாப்பதும், அதன் பங்களிப்புகளை அங்கீகரிப்பதும், எதிர்கால தலைமுறையை தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு தயார்ப்படுத்துவதும்தான் எங்கள் கவனம்,” என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கம்மவர் சமூக மக்கள்
கம்மா மாநாட்டை நடத்துவதற்கான இயல்பான தளமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் அதிகமான கம்மவர் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு சுமார் 65 லட்சம் கம்மவர் மக்கள் வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மை, பொது வாழ்வு, புதுமை, சமூக சீர்திருத்தம் போன்ற பல துறைகளில் முக்கிய பங்களிப்புகளை செய்த பொல்லினேனி முனுசாமி நாயுடு, ஜி.டி. நாயுடு, நாராயணசாமி நாயுடு போன்ற பல சிறப்பு மிக்க ஆளுமைகளை இந்த மாநிலம் வழங்கியுள்ளது.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மனார், திருமலை நாயக்கர், மங்கம்மா, ரவெல்லா மற்றும் பெம்மசானி வம்சங்கள் போன்ற தலைவர்கள் மற்றும் அரச வம்சங்களின் வரலாற்றுப் பெருமையும் இந்தப் பகுதிக்கு உரியது.
அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து பேசுகையில், மதராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்த பொல்லினேனி முனுசாமி நாயுடு கம்மா சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், கடந்த பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் அந்த சமூகத்தின் அரசியல் பங்கேற்பு குறைந்துள்ளதாக குசுமா குமார் குறிப்பிட்டார்.
கம்மா சர்வதேச கூட்டமைப்பு நோக்கம்
கம்மா சர்வதேச கூட்டமைப்பு, உலகம் முழுவதும் உள்ள கம்மா, கம்மநாயுடு, சௌத்ரி உள்ளிட்ட அனைத்து கம்மா சமூகத்தினரையும், அவர்கள் வாழும் நாடுகளின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் ஒளிவிளக்காகவும், அதிகாரமளிக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது. பண்பாட்டு பெருமை, தொழில்முறை சிறப்பு, தொழில்முனைவோர் திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பொதுவெளியில் கூட்டணி விவாதம் கூடாது.. தி.மு.க.வினருக்கு ஆர்.எஸ் பாரதி உத்தரவு
Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….
Palk Strait swimme Ishank Singh :
ஏழு வயது இஷாங்க் சிங், பால்க் ஜலசந்தியைக் கடந்த மிக இளம் வயது நீச்சல் வீரர் என்ற பெருமையைப்…
Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்….
Velmurugan Alleges Vijay : விஜய் மேனேஜர் என்னிடம் பேரம் பேசினார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்….
Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்….
Palani Temple : பழனி தண்டாயுதபானி முருகர் கோவிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி சாமி தரிசனம் செய்தார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்