சென்னை, ஜன.31, 2026: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் மருத்துவர் ராமதாஸ் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கடந்த 29-ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூரு நாகர்பாவி பகுதிக்கு மகிழுந்தில் சென்றார்.
அப்போது கர்நாடக ரக்ஷண வேதிகா அமைப்பைச் சேர்ந்த டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழி மறித்து மிரட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தி, கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
காரில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது அநாகரிகத்தின் உச்சமாகும்.
எனவே தனிமனித உரிமையைப் பறிக்கும் வகையிலும், இரு மாநில மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவருடன் இருந்த 4 நபர்கள் மீது கர்நாடக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
‘மேலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் வருங்காலத்தில் இது போன்ற அநாகரிகச் செயல்கள் குறைய வழிவகுக்கும் என இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக, கர்நாடக அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்” எனவும் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 65 லட்சம் கம்மவர்கள்.. பிப்.8 ஸ்ரீபெரும்புதூரில் மாநாடு!
Iyarkai : ‘நான்சி, கேப்டனே வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் விரும்பினது விரும்புனத தான்; இந்த மோதிரம் இதனால் வரைக்கும் அவன் ஞாபகம், என் உயிரைக்…
Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு…
Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும்…
TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை…
CWG Judo: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மவுர்யாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
Japan Quake: வடக்கு ஜப்பானின் ஆமோரி மாகாணம் அருகே 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்