வெலிங்டன் இரவு விடுதி.. நான் மட்டும் தனியாக.. ஹாரி திடீர் யூ-டர்ன்!

Harry Brook Wellington incident : இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஹாரி புரூக் கடந்த வாரம் பி.பி.சி ஸ்போர்ட்ஸ்-க்கு அளித்த பேட்டியில் வெலிங்டனில் நடந்த சம்பவத்தை தனிப்பட்ட தவறாகவே விளக்கியிருந்தார். அவர் தொடர்ந்து, குழுவிலிருந்து தனியாக நடந்துகொண்டதாகக் கூறினார்.

Published on: January 31, 2026 at 3:39 pm

லண்டன், ஜன.31, 2026: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக், கடந்த ஆண்டு வெலிங்டனில் நடந்த இரவு நேர சம்பவம் குறித்து தனது முந்தைய விளக்கத்தை திருத்தியுள்ளார். அவர் முன்பு தனியாக இருந்ததாகக் கூறியிருந்தாலும், இப்போது மற்ற வீரர்களும் அப்போது உடன் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கையில், பிப்ரவரி 7 அன்று இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள T20 உலகக் கோப்பைக்கான பயிற்சியில் ஹாரி ஈடுபட்ட நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது.

முன்னதாக ஹாரி அளித்த விளக்கத்தில், “நான் தனியாக குடிக்கச் சென்றேன். அங்கே நான் மட்டும் இருந்தேன். அப்படி நான் இருக்கக் கூடாது.
ஒரு கிளப்புக்குள் செல்ல முயன்றபோது, பவுன்சர் என்னை அடித்துவிட்டார். நான் அதிகமாக குடித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு இரண்டு கிளாஸ் அதிகமாக குடித்திருப்பேன்” என்றார்.

புதிய விளக்கம்

இந்த நிலையில் தற்போது ஹாரி தனது அணித்தலைவர்கள் உடன் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தனது முந்தைய கருத்துகள் தவறானவை என்பதை ஏற்றுக்கொண்டு, அணித்தலைவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் அப்படி கூறியதாக விளக்கமளித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “வெலிங்டனில் நடந்த சம்பவத்திற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன், அப்போது மற்றவர்கள் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். என் முந்தைய கருத்துகள் தவறானவை, ஆனால் என் நோக்கம் என் அணித்தலைவர்களை அந்தச் சூழ்நிலைக்குள் இழுக்காமல் பாதுகாப்பதே.

நான் மன்னிப்பு கேட்டுள்ளேன், மேலும் இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிறேன். தலைமை மற்றும் கேப்டன்சியுடன் வரும் வெளிப்புற பொறுப்புகளைப் பற்றி இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை உணர்கிறேன்.
தனிப்பட்ட முறையிலும், தொழில்முறை முறையிலும் முன்னேறுவதற்கு உறுதியாக இருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தருக்கு எலும்பு காயம்? 2026 டி-20 உலக கோப்பையில் ஆடுவாரா?

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை! Tiruchendur sea

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….

பால்க் ஜலசந்தியைக் கடந்த 3ஆம் வகுப்பு மாணவன்.. யார் இந்த இஷாங்க் சிங்! Youngest Ishank Singh to Cross Palk Strait

பால்க் ஜலசந்தியைக் கடந்த 3ஆம் வகுப்பு மாணவன்.. யார் இந்த இஷாங்க் சிங்!

Palk Strait swimme Ishank Singh : ஏழு வயது இஷாங்க் சிங், பால்க் ஜலசந்தியைக் கடந்த மிக இளம் வயது நீச்சல் வீரர் என்ற பெருமையைப்…

91 வயது முதியவர் மரணம்.. மகனுடன் தீக்குளிக்க முயன்ற வக்கீல்.. தூத்துக்குடியில் பரபரப்பு Lawyer Son Attempt Self Immolation in Property Row

91 வயது முதியவர் மரணம்.. மகனுடன் தீக்குளிக்க முயன்ற வக்கீல்.. தூத்துக்குடியில் பரபரப்பு

Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்….

விஜய் மேனேஜர் என்னிடம் பேரம் பேசினார்.. த.வா.க வேல் முருகன்! Velmurugan Alleges Vijay

விஜய் மேனேஜர் என்னிடம் பேரம் பேசினார்.. த.வா.க வேல் முருகன்!

Velmurugan Alleges Vijay : விஜய் மேனேஜர் என்னிடம் பேரம் பேசினார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்….

எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், தி.மு.க கூட்டணி வெற்றிப் பெறும்.. தொல். திருமாவளவன்! Thol Thirumavalavan

எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், தி.மு.க கூட்டணி வெற்றிப் பெறும்.. தொல். திருமாவளவன்!

Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்….

மதுரையில் வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. முருகன் என் குலத்தெய்வம்.. சுந்தர் சி Sundar C in Palani Temple

மதுரையில் வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. முருகன் என் குலத்தெய்வம்.. சுந்தர் சி

Palani Temple : பழனி தண்டாயுதபானி முருகர் கோவிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி சாமி தரிசனம் செய்தார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com