Maharashtra | நாக்பூரில் ரயில் ஒன்று தடம் புரண்டது.
Maharashtra | நாக்பூரில் ரயில் ஒன்று தடம் புரண்டது.
Published on: October 22, 2024 at 7:31 pm
Maharashtra | மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமார் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் செவ்வாய்க்கிழமை தடம் புரண்டன.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு அல்லது பெரிய காயங்கள் எதுவும் இல்லை. தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து வழமையான ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
#WATCH | Maharashtra: Two coaches of a train (18029) CSMT Shalimar Express derailed near kalamna station near Nagpur. No injuries have been reported.
— ANI (@ANI) October 22, 2024
Restoration work is underway. pic.twitter.com/fmCBf0c4N7
இதேபோன்ற கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தில் (அக். 18), புறநகர் ரயில் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நிலையத்தில் நடைமேடைக்குள் நுழையும் போது தடம் புரண்டது. இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க பாகிஸ்தான் பெண்ணை மணந்த பாஜக பிரமுகர் மகன்; இணையத்தில் வீடியோ வைரல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com