பணம், பேராசை, ஆள்மாறாட்டம்: திருநெல்வேலி தலைமை காவலர் பெண்ணுடன் கைது!

Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 6, 2024 at 1:22 pm

Tirunelveli Head Constable Arrest | திருநெல்வேலி நகரக் காவல்துறையில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவரும், பெண் ஒருவரும் ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சனிக்கிழமை (அக்.5,2024) கைது செய்யப்பட்டனர். முன்னதாக, மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சசிகுமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம், வி.கே.புதூரை சேர்ந்தவர் முருகராஜ், 41. இவர், திருநெல்வேலி சந்திப்பு போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் குடும்பம் பாளையங்கோட்டையில் உள்ள வி.எம் சத்திரத்தில் வசித்துவருகிறார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி (40) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இருவரும் வருவாய்த் துறை மற்றும் பிறரிடம் பட்டா பெற்றுத் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் சசிகுமாரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அப்போது, வளர்மதி தன்னை மாவட்ட வருவாய் அலுவலராகக் கூறி, பட்டா மாறுதல் மற்றும் புறம்போக்கு நிலங்களுக்கு ஆவணங்கள் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. அதை உண்மை என நம்பிய சசிகுமார், மதுரையில் ஒரு நிலத்திற்கு பட்டா வழங்குவதற்காக ₹10 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வளர்மதி பணமோ அல்லது பட்டாவோ வழங்கவில்லை. சிக்கலில் சிக்கிய முருகராஜ், காசோலை கொடுத்துள்ளார். எனினும் இதில் பணம் இல்லை. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கைது செய்தார். இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க

பழைய குற்றாலம் அருவி பொதுமக்களுக்கு திறப்பு.. குளிக்க கட்டணம் இல்லை.. ஆனால், No Fee at Old Courtallam

பழைய குற்றாலம் அருவி பொதுமக்களுக்கு திறப்பு.. குளிக்க கட்டணம் இல்லை.. ஆனால்,

No Fee at Old Courtallam : பழைய குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது; இங்கு குளிக்க கட்டணம் இல்லை….

தென்காசி–திருநெல்வேலியில் முகமூடி கும்பல் தாக்குதல்: 8 பேர் கைது Eight Held in Masked Assault

தென்காசி–திருநெல்வேலியில் முகமூடி கும்பல் தாக்குதல்: 8 பேர் கைது

Eight Held in Masked Assault : தென்காசி- திருநெல்வேலியில் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்திய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

நெல்லையில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது.. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் Tirunelveli

நெல்லையில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது.. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்

Tirunelveli: நெல்லையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்….

திடுக்கிட்ட திருநெல்வேலி.. ஆண் நண்பரின் ஆசையை நிறைவேற்ற.. ச்சீ இப்படியெல்லாமா? Tirunelveli Hostel Scandal

திடுக்கிட்ட திருநெல்வேலி.. ஆண் நண்பரின் ஆசையை நிறைவேற்ற.. ச்சீ இப்படியெல்லாமா?

Tirunelveli Hostel Scandal: திருநெல்வேலியில் பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது….

த.வெ.க.வில் இணையும் இசக்கி சுப்பையா? அடுத்த விக்கெட் காலி? பரபரக்கும் தமிழக அரசியல் AIADMK MLA Isakki Subbiah

த.வெ.க.வில் இணையும் இசக்கி சுப்பையா? அடுத்த விக்கெட் காலி? பரபரக்கும் தமிழக அரசியல்

AIADMK MLA Isakki Subbiah : அ.தி.மு.க. எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com