Telangana | தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்சசையாகின. இவர் நடிகர் நாகசைதன்யா, சமந்தா காதல் திருமணம் விவாகரத்து குறித்து பேசினார். அப்போது இதற்கு காரணம் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்றார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் சுரேகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி, தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் சுரேகா, “பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி ராமா ராவ் நடிகைகளின் போன்களை ஒட்டுக்கேட்பார். பின்னர் அவர்களின் பலவீனங்களை கண்டறிந்து பிளாக்மெயில் செய்வார். நடிகை சமந்தா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. இது நாக சைதன்யா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்திலும் சமந்தா பெயரை இழுத்துப் பேசி இருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் முன்னணி நடிகர்கள் ஆவார்கள். மேலும், தெலுங்கு திரையுலகில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமான அக்கினேனியை சேர்ந்தவர் நாக சைதன்யா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Uday Bhanu Chib: பாரத் மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகருக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது….
Rahul Gandhi’s soldiers protest: இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் 2026-இல், இந்திய யூத் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சட்டை கழற்றி போராட்டம்…
Mani Shankar Aiyar: “யாரும் காங்கிரஸ் கட்சி பெயரில் ஓட்டு போடப் போவதில்லை; நமக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் வேண்டுமா, பழனிசாமி வேண்டுமா என்ற அடிப்படையில்தான் மக்கள் ஓட்டுப்…
DMK Alliance Meet in Puducherry: புதுச்சேரியில் திமுக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை; அதே நேரம் மற்ற கூட்டணி கட்சிகளான…
Parliament Turmoil: மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்