Telangana | தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்சசையாகின. இவர் நடிகர் நாகசைதன்யா, சமந்தா காதல் திருமணம் விவாகரத்து குறித்து பேசினார். அப்போது இதற்கு காரணம் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்றார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் சுரேகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி, தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் சுரேகா, “பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி ராமா ராவ் நடிகைகளின் போன்களை ஒட்டுக்கேட்பார். பின்னர் அவர்களின் பலவீனங்களை கண்டறிந்து பிளாக்மெயில் செய்வார். நடிகை சமந்தா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. இது நாக சைதன்யா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்திலும் சமந்தா பெயரை இழுத்துப் பேசி இருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் முன்னணி நடிகர்கள் ஆவார்கள். மேலும், தெலுங்கு திரையுலகில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமான அக்கினேனியை சேர்ந்தவர் நாக சைதன்யா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Nitin Nabin: பட்டியல் இனத்தை அவமதித்தது காங்கிரஸ்; இதற்கு வரலாறு இருக்கு என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் இதில் நவீன் தெரிவித்துள்ளார்….
Siddaramaiah 75% reservation proposal: பெங்களூருவில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், “இது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; சமூக சமநிலையை நிலைநிறுத்தும் அவசியமான…
Vijay Vs RahulGandhi : தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ்– தமிழக வெற்றிக் கழகம் இடையே பிளவு உருவாகும் சூழ்நிலை அதிகரித்துள்ளது….
Vijay vs Rahul: PM Race? : யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் ஆனால் 2029ல் ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சியின்…
Rahul Gandhi PM candidate; ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அதில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்