இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீச்சு; அடுத்தடுத்து விழுந்த குண்டுமழை: இஸ்ரேலியர்கள் நிலை என்ன?

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.

Published on: October 1, 2024 at 11:00 pm

Iran vs Israel | ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

ஹிஸபுல்லாவை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலரின் உயர் அதிகாரி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், சர்வதேச நேரப்படி இரவு 10.08 மணிக்கு ஏவுகணைகள் “சிறிது நேரத்திற்கு முன்பு” ஏவப்பட்டதாகக் கூறியது.

இந்த ஏவுகணையை ஈரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதற்கிடையில், 100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், “ஏவுகணைகள் குண்டு மழை பொழிவதை வீடியோக்கள் காட்டின. “ஜெருசலேம் மற்றும் பிற இடங்களில்” குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் உறுதிப்படுத்தின. இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் தாக்குதல் தொடர்கிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை நீங்கள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல் வேட்டை! Mandaadi Box Office Collections

ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல்

Mandaadi Box Office Collections : நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ரூ.80 கோடிக்கும் மேல் வசூலித்து தியேட்டர்களில் சிறப்பாக ஓடிவருகிறது….

திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்! Special Train Services

திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்!

Special Train Services: திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை காலம் நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது….

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள்.. நெஸ்லே மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 3 வழக்குகள்! Nestle

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள்.. நெஸ்லே மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 3 வழக்குகள்!

Nestle: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் விவகாரத்தில் Nestle மீது FSSAI 3 வழக்குகள் செய்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com