துணை முதலமைச்சரான உதயநிதி; வம்ச அரசியலா? கார்த்தி ப சிதம்பரம் பதில்

Karthi P Chidambaram | தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என கார்த்தி ப. சிதம்பரம் கூறினார்.

Published on: October 1, 2024 at 9:49 pm

Karthi P Chidambaram | சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப சிதம்பரம் சென்னையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிக வலுவாக உள்ளது” என்றார். மேலும் பேசிய கார்த்தி, “ஹரியானாவில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கு தேர்தல் நடக்கும்போது அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.

மகாராஷ்டிராவில் நவ.26ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனை தலைமை தேர்தல் ஆணையரே உறுதிப்படுத்தியுள்ளார். இங்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவா காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது” குறிப்பிடத்தக்கது.

வம்ச அரசியல் சலிப்பான வாதம்

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது குறித்து பேசிய கார்த்தி ப சிதம்பரம், “முதல்வர் எடுத்த முடிவு அவரது உரிமைக்கு உட்பட்டது. யாரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும், கைவிடவும், பதவி உயர்வு அளிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. முதல்வர் தனது உரிமைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார். வம்ச அரசியல் என்பது ஓர் சலிப்பான வாதம்” என்றார்.

இதையும் படிங்க

தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்.. உதயநிதி DMK Rejects MLA Car Plan

தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்.. உதயநிதி

DMK Rejects MLA Car Plan : தமிழ்நாடு அரசு கடனில் இருக்கும் போது, தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்…

உதயநிதியை போல் பா.ஜ.க. தலைவரை ஏன் அவசரமாக கைது செய்யவில்லை? துரைமுருகன் Duraimurugan

உதயநிதியை போல் பா.ஜ.க. தலைவரை ஏன் அவசரமாக கைது செய்யவில்லை? துரைமுருகன்

Duraimurugan: உதயநிதியை போல் தமிழக பா.ஜ.க தலைவரை ஏன் அவசர அவசரமாக கைது செய்யவில்லை என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார்….

ரூ.100 கோடி இழப்பீடு.. 2 ஊடகங்களுக்கு உதயநிதி வக்கீல் நோட்டீஸ்! Udhayanidhi Demands ₹100 Crore

ரூ.100 கோடி இழப்பீடு.. 2 ஊடகங்களுக்கு உதயநிதி வக்கீல் நோட்டீஸ்!

Udhayanidhi Demands ₹100 Crore : தனது கருத்துக்களை தவறாக கூறி சித்தரித்தாக கூறி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ரூ.100 கோடி இழப்பீடு கோரி…

உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவரது வீட்டினர் ஏற்பார்களா? அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் C.T.R. Nirmal Kumar

உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவரது வீட்டினர் ஏற்பார்களா? அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்

C.T.R. Nirmal Kumar: உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவரது வீட்டில் உள்ள நபர்கள் ஏற்பார்களா என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்….

நாளை பட்ஜெட், உதயநிதி அவையில் இருக்க வேண்டும்.. மு.க ஸ்டாலின் M K Stalin

நாளை பட்ஜெட், உதயநிதி அவையில் இருக்க வேண்டும்.. மு.க ஸ்டாலின்

M K Stalin: நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com