இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீச்சு; அடுத்தடுத்து விழுந்த குண்டுமழை: இஸ்ரேலியர்கள் நிலை என்ன?

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.

Published on: October 1, 2024 at 11:00 pm

Iran vs Israel | ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

ஹிஸபுல்லாவை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலரின் உயர் அதிகாரி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், சர்வதேச நேரப்படி இரவு 10.08 மணிக்கு ஏவுகணைகள் “சிறிது நேரத்திற்கு முன்பு” ஏவப்பட்டதாகக் கூறியது.

இந்த ஏவுகணையை ஈரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதற்கிடையில், 100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், “ஏவுகணைகள் குண்டு மழை பொழிவதை வீடியோக்கள் காட்டின. “ஜெருசலேம் மற்றும் பிற இடங்களில்” குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் உறுதிப்படுத்தின. இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் தாக்குதல் தொடர்கிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை நீங்கள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை.. தமிழக அரசியலில் பரபரப்பு! EPS Holds Key Meet

எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை.. தமிழக அரசியலில் பரபரப்பு!

EPS Holds Key Meet : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

அம்மோனியா வாயுக் கசிவால் 7 உயிர்கள் பலி… திருவள்ளூரில் நடந்தது என்ன? Tiruvallur Tragedy

அம்மோனியா வாயுக் கசிவால் 7 உயிர்கள் பலி… திருவள்ளூரில் நடந்தது என்ன?

Tiruvallur Tragedy : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும்…

வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு.. வைகோ வெளியிட்ட அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு! MDMK Meet on June 26

வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு.. வைகோ வெளியிட்ட அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு!

MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com