Karthi P Chidambaram | சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப சிதம்பரம் சென்னையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிக வலுவாக உள்ளது” என்றார். மேலும் பேசிய கார்த்தி, “ஹரியானாவில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கு தேர்தல் நடக்கும்போது அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.
மகாராஷ்டிராவில் நவ.26ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனை தலைமை தேர்தல் ஆணையரே உறுதிப்படுத்தியுள்ளார். இங்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவா காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது” குறிப்பிடத்தக்கது.
வம்ச அரசியல் சலிப்பான வாதம்
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது குறித்து பேசிய கார்த்தி ப சிதம்பரம், “முதல்வர் எடுத்த முடிவு அவரது உரிமைக்கு உட்பட்டது. யாரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும், கைவிடவும், பதவி உயர்வு அளிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. முதல்வர் தனது உரிமைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார். வம்ச அரசியல் என்பது ஓர் சலிப்பான வாதம்” என்றார்.
இதையும் படிங்க
Udhayanidhi – Seeman Meet : சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் ஒரே மேடையில் சந்தித்து கை…
Udhayanidhi Stalin : தமிழக எதிர்க்கட்சித் தலைவர் த.வெ.க. அரசை இரண்டு செயல்களுக்காக பாராட்டினார்….
Tamil Nadu Assembly Session : தமிழக வளர்ச்சி திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்….
Minister Ramesh: நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தி.மு.க.வை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார்….
Udhayanidhi Stalin statement: தமிழ்நாடு 125 மருத்துவ இருக்கைகளை இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்