TN Minister Arunraj : ‘அரசு பெருமளவு நிதி செலவிட்டாலும், மருத்துவமனைகள் தூய்மையற்றவையாகவும் கூட்ட நெரிசல் மிக்கவையாகவும் உள்ளன என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்துவோம்“ என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
TN Minister Arunraj : ‘அரசு பெருமளவு நிதி செலவிட்டாலும், மருத்துவமனைகள் தூய்மையற்றவையாகவும் கூட்ட நெரிசல் மிக்கவையாகவும் உள்ளன என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்துவோம்“ என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

Published on: June 11, 2026 at 5:40 pm
சென்னை, ஜூன் 11, 2026: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், அரசு மருத்துவமனைகளின் நிலைமை குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். “மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரித் தலைவர்களையும் சந்தித்து வருகிறோம். அரசு பெருமளவு நிதி செலவிட்டாலும், மருத்துவமனைகள் தூய்மையற்றவையாகவும் கூட்ட நெரிசல் மிக்கவையாகவும் உள்ளன என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்துவோம்” என அவர் தெரிவித்தார்.
இதற்காக, ‘நோயாளி அனுபவக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு தொடர்ந்து கூடி ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். நோயாளிகளின் அனுபவங்களை கண்காணித்து, ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அமைச்சர் அருண்ராஜ் பேட்டி
#WATCH | Chennai | Tamil Nadu Minister Dr KG Arunraj says, "We have been meeting with Heads of all government medical colleges in the state… The government is spending a huge amount of money, but there is a general feeling that government hospitals are not clean and are… pic.twitter.com/VglWsp73FJ
— ANI (@ANI) June 11, 2026
(நன்றி: ஏ.என்.ஐ)
மேலும், மருத்துவரைச் சந்திப்பதற்கான முன்பதிவு முறையை செயலி (ஆப்) மூலம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். இதன் மூலம், நோயாளிகள் மருத்துவர்களைச் சந்திக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும்.
அரசு மருத்துவமனைகளின் தூய்மை, நோயாளி சேவை மற்றும் கூட்ட நெரிசல் குறித்த பொதுவான குறைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க : திருநெல்வேலி யார்டு சீரமைப்பு பணிகள்.. முக்கிய ரயில் சேவைகள் பாதிப்பு.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com