US Denies Hormuz Report : வெள்ளை மாளிகை, ஈரான் அரச ஊடகங்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் “அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த வரைவு” குறித்த செய்தியை “முழுமையான பொய்” எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
US Denies Hormuz Report : வெள்ளை மாளிகை, ஈரான் அரச ஊடகங்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் “அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த வரைவு” குறித்த செய்தியை “முழுமையான பொய்” எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Published on: May 28, 2026 at 11:27 am
வாஷிங்டன், மே 28, 2026: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ஈரான் அரச ஊடகங்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் “அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த வரைவு” குறித்த செய்தியை “முழுமையான பொய்” எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த வரைவு, ஹோர்முஸ் கடல்சந்தியை மீண்டும் திறப்பது மற்றும் அமெரிக்க படைகளை பின்வாங்குவது போன்ற அம்சங்களை கொண்டதாக ஈரான் ஊடகங்கள் கூறினாலும், அமெரிக்கா அதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனக் கூறியுள்ளது.
ஈரான் ஊடகங்கள் என்ன கூறின?
ஹோர்மூஸ் பகுதியில், ஒரு மாதத்திற்குள் வணிகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க வேண்டும் என ஈரானிய ஊடகங்கள் கூறின. மேலும், அமெரிக்க படைகள் ஈரான் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து பின்வாங்கும் எனவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பதில்
“இது முற்றிலும் தவறான, உண்மைக்கு புறம்பான செய்தி” என அமெரிக்கா மறுத்துள்ளது. இதற்கிடையில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரான் மீது மீண்டும் இராணுவ தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க : லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 12 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com