Crude Oil Rises 1% : அமெரிக்கா ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஒரு சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது; இதனால் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Crude Oil Rises 1% : அமெரிக்கா ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஒரு சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது; இதனால் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Published on: July 10, 2026 at 11:05 am
Updated on: July 10, 2026 at 11:06 am
மும்பை ஜூலை 10, 2026; சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 1% உயர்ந்துள்ளது. அமெரிக்கா– ஈரான் இடையிலான புதிய இராணுவ மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் கடல்சந்தியில் ஏற்பட்ட சப்ளை சவால்களை முதலீட்டாளர்கள் மீண்டும் மதிப்பீடு செய்யத் தொடங்கியதால், இந்த உயர்வு ஏற்பட்டதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
எண்ணெய் விலை உயர்வின் முக்கிய காரணம் ஹோர்முஸ் கடல்சந்தியில் ஏற்பட்ட சப்ளை தடைகள். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்த கடல்சந்தி வழியாக நடைபெறுகிறது. சமீபத்திய அமெரிக்க தாக்குதல்கள் மற்றும் ஈரான் பதிலடி நடவடிக்கைகள் காரணமாக, கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரண்டு கச்சா எண்ணெய் விலை சுமார் $78.80 பீப்பாய் மற்றும் WTI விலை $74.26 பீப்பாய் வரை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களின் மனநிலையை மாற்றியுள்ளது. கடந்த சில வாரங்களில் எண்ணெய் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், புதிய மோதல்கள் “வார் பிரிமியம்” எனப்படும் கூடுதல் அபாயச் செலவை மீண்டும் சந்தையில் கொண்டு வந்துள்ளன. இதனால், பொருளாதாரத்தில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் பங்குகள் சரிவடைந்துள்ளன; இந்திய சந்தைகளிலும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக முதலீட்டாளர்கள் கவலைப்படுகின்றனர்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்படும். கப்பல் காப்பீட்டு செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன, இதனால் எண்ணெய் இறக்குமதி நாடுகளின் செலவுகள் மேலும் உயரும். இந்தியா போன்ற பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு இது இறக்குமதி பில் அதிகரிப்பு, பணவீக்கம், வளர்ச்சி சவால்கள் ஆகியவற்றை உருவாக்கும். இதனால் தற்போது முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் போர்ட்ஃபோலியோவை மறுசீரமைத்து, அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க; டிசிஎஸ் முதல் காலாண்டு வருவாய் 5% உயர்வு.. எவ்வளவு கோடிகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com