இனி யாரையும்.. நாக சைதன்யா பிரிவு.. சமந்தா கடுமையான முடிவு!

Samantha: நாக சைதன்யாவுடன் பிரிவுக்குப் பிறகு, யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என்று நினைத்திருந்த நடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குநர் ராஜ் நிடிமோருவின் அன்பும் நட்பும் தன்னை ஒரு நல்ல மனிதராக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

Published on: February 23, 2026 at 8:28 pm

ஹைதராபாத், பிப்.23, 2026: “ராஜ் நிடிமோறு எனக்கு புதிய பார்வையை அளித்தார். அவரது நட்பு என்னை இன்னும் சிறந்தவராக மாற்றியது” என நடிகை சமந்தா கூறியுள்ளார். முன்னதாக, நாக சைதன்யாவுடன் பிரிவுக்குப் பிறகு, யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என்று நினைத்திருந்த நடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குநர் ராஜ் நிடிமோருவின் அன்பும் நட்பும் தன்னை ஒரு நல்ல மனிதராக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

சமந்தா வாழ்க்கையில் புதிய அத்தியாயம்

நாக சைதன்யாவுடன் பிரிவுக்குப் பிறகு, நடிகை சமந்தா ரூத் பிரபு தனது வாழ்க்கையின் கடினமான கட்டத்தை கடந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், அவர் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், “ திருமண முறிவு- பிரிவுக்குப் பிறகு நான் முழுமையாக மாறினேன். யாரையும் சார்ந்து இருக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் ராஜின் அன்பும் நட்பும் எனக்கு மீண்டும் நம்பிக்கையை அளித்தது. இன்று நான் ஒரு நல்ல மனிதராக மாறியுள்ளேன்” என்று சமந்தா வோக் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மேலும், “சில நாட்களுக்கு முன் ஒரு பழைய நண்பரைச் சந்தித்தேன். அவர் பின்னர் ஒரு குரல் செய்தி அனுப்பி, ‘நீண்ட காலத்திற்கு பிறகு நீ சுவாசிக்க போராடவில்லை என்று தோன்றுகிறது’ என்றார். நான் இனி நடிப்பதில்லை” என்று சமந்தா பகிர்ந்துள்ளார். சமந்தாவின் இந்த அனுபவம், தனிப்பட்ட சவால்களைத் தாண்டி, புதிய அன்பும் நட்பும் வாழ்க்கையை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திரைப்பட துறையை விட்டு விலக தயார்.. தி கேரளா ஸ்டோரி இயக்குனர் பரபரப்பு பேட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com