பாகிஸ்தானில் பழங்குடியின பிரிவினருக்கு இடையே மோதல் ; 10 பேர் பலி

பாகிஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

Published on: November 28, 2024 at 10:26 am

Pakistan sectarian violence | பாகிஸ்தானில் சுன்னி மற்றும் ஷியா பழங்குடியினருக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

கடந்த இரு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வன்முறை நடைபெற்றது. ஆங்காங்கே நடந்த பழங்குடியின மதவெறி தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் இறந்தனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

குர்ரம் மாவட்டத்தில் உள்ள அலிசாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று பரசினாருக்கு அருகே பயணிகள் வேன்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடந்த பழங்குடியின மதவெறி வன்முறையில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஷியா மற்றும் சுன்னி சமூகங்களுக்கு இடையே ஒரு மாகாண அரசாங்கக் குழுவிற்கும் இரு பிரிவைச் சேர்ந்த பெரியவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஏழு நாள் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கு மோதல்கள் நடக்கின்றன.

இந்நிலையில், “போர்நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது,” என்று குர்ரம் துணை ஆணையர் ஜாவேதுல்லா மெஹ்சூத் கூறினார்.

நாளை முதல் குர்ராமில் போலீசார் மற்றும் இராணுவ வீரர்கள் தொடர்ந்து நிறுத்தப்படுவார்கள் என்றும், பாதுகாப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க பாகிஸ்தானில் கண்டதும் சுட உத்தரவு: பள்ளிகள், இணையம் மூடல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com