Chennai | சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Chennai | சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Published on: November 12, 2024 at 9:57 am
Chennai | சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு காவல் நிலையத்தில் நிவாரணம் கிடைக்கவில்லை என்றும்; சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்திலேயே தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் தீவிரம் கருதி சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதன் மூலம் வழக்கை மீண்டும் மாநில அரசு விசாரிக்கும் என தெரிய வருகிறது.
இதையும் படிங்க குளிர்பானத்தில் போதை மருந்து: நீட் மாணவி பாலியல் வன்புணர்வு; 2 ஆசிரியர்கள் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com