குளிர்பானத்தில் போதை மருந்து: நீட் மாணவி பாலியல் வன்புணர்வு; 2 ஆசிரியர்கள் கைது

Uttar Pradesh | நீட் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: November 9, 2024 at 9:01 pm

Uttar Pradesh | உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களால் 6 மாதங்களுக்கும் மேலாக நீட் தேர்வுக்கு தயாரான மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வெள்ளிக்கிழமை (நவ.8, 2024) கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த வழக்கில் இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஷகில் சித்திக் உயிரியல் ஆசியர் ஆவார். மற்றொருவர் விகாஷ் போர்வால் வேதியியல் ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி அளித்துள்ள புகாரில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் சித்திக் புத்தாண்டு கொண்டாட வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அப்போது நான் மறுத்தேன்; அவர் மற்ற மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் என்றார். அதை நம்பி நான் சென்றேன். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. இது பற்றி கேட்டபோது, அவர்கள் எல்லோரும் வந்துகொண்டு இருக்கிறார்கள் என்றார். சிறிது நேரத்தில் குளிர்பானம் கொடுத்தார். அதை வாங்கி குடித்து நான் மயங்கிவிட்டேன். பின்புதான் என் வாழ்க்கையில் அந்தக் கொடுரங்கள் நிகழ்ந்தன” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்: மும்பையில் இளம்பெண் கைது!

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!
Hindu woman raped by local politician

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com