யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்: மும்பையில் இளம்பெண் கைது!

Death threat to Yogi Adityanath | உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Published on: November 3, 2024 at 2:27 pm

Death threat to Yogi Adityanath |அடுத்த 10 தினங்களுக்குள் யோகி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லை என்றால், மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட என்சிபி தலைவர் பாபா சித்திக்கின் கதியை யோகி சந்திக்க நேரிடும் என்று மும்பை டிராபிக் போலீஸ் வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

இதுகுறித்து வொர்லி காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) உல்லாஸ்நகர் போலீஸாருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் குறுஞ்செய்தி அனுப்பியது பெண் என்று தெரியவந்தது.

24 வயதான இளம்பெண்

இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்தப் பெண் ஃபாத்திமா கான் (24) என்பதும் தானே மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், அந்தப் பெண் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாபா சித்திக் கொலை

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், அஜித் பவாரின் என்சிபி தலைவருமான பாபா சித்திக், அக்டோபர் 12ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ‘நான் ஜன்பத் வீட்டின் ரசிகன் அல்ல’: தந்தை மரணத்தை நினைவுகூர்ந்த ராகுல் காந்தி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com