அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை.. ஞானசேகரன் தாயார் ஐகோர்ட்டில் பரபரப்பு மனு!

Anna University student sexually assaulted case: அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தாயார் ஹைகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Published on: February 25, 2025 at 11:27 pm

Updated on: February 26, 2025 at 1:28 am

சென்னை, பிப்ரவரி 25 , 2025: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
அப்பகுதி அருகே பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், இது தொடர்பான எஃப்.ஐ.ஆர் கசிந்த விஷயம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்த பரிசோதனையும் நடைபெற்று உள்ளது.

மேலும் இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் சுப்பிரமணியத்திடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் மூலமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது நிதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிக்கையில் ஞானசேகரன் குரல் மாதிரிகள் உட்பட பல்வேறு விஷயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஞானசேகரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு 2025 பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு.. இஸ்ரோ அலுவலகம் முன்பு தி.மு.க. போராட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com