ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை.. 31 வயது இளைஞர் கைது

Erode: ஈரோட்டில் 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 31 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: August 17, 2026 at 5:03 pm

Updated on: August 17, 2026 at 5:04 pm

ஈரோடு, ஆக.17, 2026: ஈரோடு மாவட்டம் அந்தியூரில், 85 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி ஆர். விஜி (31) என்பவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனை இழந்த அந்த மூதாட்டி, அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கரும்பு வெட்டும் பணியில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். விஜியும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். பணியின்போது அவர் மூதாட்டியிடம் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை இரவு, மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த விஜி, அவரைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க அவர் வாயை மூடியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலையில், மூதாட்டி அருகில் வசிப்பவர்களிடம் சம்பவத்தைத் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டார்.

மூதாட்டியின் புகாரின் அடிப்படையில், அந்தியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த விஜியைக் கைது செய்தனர். விஜி திருமணமாகியிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க :

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com